தஞ்சாவூர், செப்.21 - வர்க்கப் போராளி, தஞ்சை தியாகி, மக்கள் தலைவர் என்.வெங்கடாசலம் 47 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் நூற்றாண்டு துவக்க வீரவணக்கம் உறுதியேற்பு நிகழ்ச்சி, தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே சனிக் கிழமை நடைபெற்றது. சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் என்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் சாமி.நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்டச் செயற்குழு உறுப் ்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோ கரன், பி.செந்தில்குமார், என்.சுரேஷ் குமார், என்.சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் நா.குருசாமி, என்.சிவ குரு மற்றும் மாநகரக் குழு தோழர்கள், கிளைச் செயலாளர்கள், அரங்க பொறுப் பாளர்கள் கலந்து கொண்டனர். கிளைச் செயலர் எம்.மாதவன் நன்றி கூறினார். கும்பகோணம் கும்பகோணம் சிஐடியு அலுவல கத்தில், தோழர் என்.வி. உருவப் படத் திற்கு செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாநகரச் செயலாளர் செந்தில்குமார், மாதர் சங்க பொறுப்பாளர் அறிவுராணி மற்றும் கண்ணன், ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.