districts

பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மார்ச் 22 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 14 - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிறன்று திருச்சி யில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். வேலை  அறிக்கையை பொதுச் செய லாளர் மயில் வாசித்தார். மாநில பொருளாளர் மத்தேயு  வரவு - செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். கூட்டத்தில் பழைய பென்சன் திட்டத்தை நடை முறைப்படுத்த வலியுறுத்தி மார்ச் 22 அன்று நடைபெ றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட த்தில் முழுமையாக பங்கேற் பது. மார்ச் 28, 29 ஆம் தேதி களில் நடைபெறும் அகில  இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கலந்து கொள்வது. தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உயர் கல்விக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் மாவட்ட மாறு தல் விரைந்து நடத்தப்பட வேண்டும். ஆசிரியர்களை இணையத்தில் நாள்தோறும்  தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ள கூறுவதை யும், தேவையற்ற பயிற்சிகள்  அளிப்பதையும் பள்ளி கல்வித்துறை நிறுத்த வேண்டும். வகுப்பறையில் மாணவர்களுக்கு முழுமை யான கற்பித்தல் பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக திருச்சி மாவட்ட செயலாளர் ஆரோக் கியராஜ் வரவேற்றார். முடி வில் துணை பொது செயலா ளர் கணேசன் நன்றி கூறி னார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செய லாளர்கள், மாநில செயற் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.