districts

திருச்சி முக்கிய செய்திகள்

மார்ச் 21 திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருவாரூர், மார்ச் 11 - திருவாரூர் மாவட்டத்தில் மார்ச் 21 அன்று தியாக ராஜர் சுவாமி திருக்கோயில் தேர்த் திருவிழா நடைபெற வுள்ளதால், திருவாரூர் மாவட்டத்திற்கு 21.3.2024 அன்று  உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மார்ச் 21 அன்று  மாவட்டத்திலுள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூ லங்களும் அரசு பாதுகாப்பான அவசர அலுவல் களைக் கவனிக்கும் பொருட்டு, குறைந்தபட்ச பணியாளர் களுடன் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், 11 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரசு  பொதுத்தேர்வு மார்ச் 21 அன்று திட்டமிட்டபடி நடை பெறும் என்று மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரி வித்துள்ளார்.

விளக்கக் கூட்டம் 

திருச்சிராப்பள்ளி, மார்ச் 11- அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் மருத்து வக் காப்பீடு திட்ட விளக்க கூட்டம் திருச்சியில் நடை பெற்றது. திருச்சி மண்டல தலைவர் சேகர் தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மாநில துணைச் செயலாளர்கள் ஜேம்ஸ் கஸ்பார், சின்னசாமி, மாநிலத் தலைவர் கிருஷ்ணன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மண்டல பொருளாளர் ராம சாமி நன்றி கூறினார்.

இளைஞர் கொலை: ஒருவர் கைது

தஞ்சாவூர், மார்ச் 11- தஞ்சாவூரில் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள்  நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவரை காவல்துறையினர் கைது  செய்தனர். தஞ்சாவூர் மேல அலங்கம் கோட்டைமேடு பகுதியைச்  சேர்ந்தவர் தர்ஷன் (32). இவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில்  வர்ணம் பூசும் தொழிலாளி கே.குணசேகரன் (42) வசித்து  வருகிறார். குணசேகரனின் மோட்டார் சைக்கிள் தர்ஷன்  வீட்டுப் பகுதியில் நிறுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படு கிறது. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தக ராறில் தர்ஷனை குணசேகரன் கத்தியால் குத்தினார்.  இதனால் படுகாயமடைந்த தர்ஷன் தஞ்சாவூர் மருத்துவக்  கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  உயிரிழந்தார். இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர்  வழக்குப் பதிந்து குணசேகரனை கைது செய்தனர்.

வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா '

தஞ்சாவூர், மார்ச் 11-  பேராவூரணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்  திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், நபார்டு (2023-24) திட்டத் தின்கீழ், மணக்காடு - மங்களநாடு இணைப்பு சாலையில்,  மருதங்குடியாற்றின் குறுக்கே, ரூ.5.26 கோடி மதிப்பீட்டில்  உயர்மட்டப் பாலம், குப்பத்தேவன் ஊராட்சி, கணேச புரம் தேவர் குடியிருப்பில் ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில்  ஆழ்துளைக் கிணறு, ஊமத்தநாடு ஊராட்சி, கைவன வயல் காமராஜ் நகரில் ரூ.12.90 லட்சம் மதிப்பீட்டில், மயானச் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.5.48  கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணி களை, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி தொ டங்கி வைத்தார்.

கரூர் மக்கள் நீதிமன்றத்தில் 1,370 வழக்குகளுக்கு தீர்வு

கரூர், மார்ச் 11 - கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வால் தேசிய மக்கள்  நீதிமன்றம் நடத்தப் பட்டது. கரூரில் 5 அமர்வு, குளித்தலையில் ஒரு அமர்வு மற்றும் அரவக் குறிச்சியில் ஒரு அமர்வு என மொத்தம் 7  அமர்வுகளில் மக்கள்  நீதிமன்றம் நடைபெற் றது. இந்த அமர்வு களில் 1,493 வழக்குகள்  எடுத்துக் கொள்ளப் பட்டு, 1,370 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.  இதை முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதி மன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செய லரும், சார்பு நீதிபதியு மான எம்.பாக்கியம் இதற் கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

பள்ளியில் ஆரோக்கிய ஓட்டம்

பாபநாசம், மார்ச் 11- நேரு யுவகேந்திரா சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆபிதீன் பள்ளியில் ஆரோக்கிய ஓட்டம்  நடந்தது. இதில் மாணவி கள் பங்கேற்றனர். முதல் மூன்று இடம் பெற்ற வர்களுக்கு டிஷர்ட்,  சான்றிதழ் வழங்கப்பட் டது. இதில் பள்ளி  முதல்வர் செல்வி, லயன்ஸ் கிளப் நிர்வாகி கள் சாப்ஜான், கணேசன், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் மலர் பாரதி மற்றும் ஆசிரி யைகள் பங்கேற்றனர்.

கழிவு பட்டாசுகள் தீப்பற்றியதில் தொழிலாளி படுகாயம்

சிவகாசி, மார்ச் 11- விருதுநகர் மாவட் டம் சிவகாசி சத்யா நகரைச் சேரந்தவர் வன ராஜா (25). பட்டாசுத் தொழிலாளியான இவர் வெங்கால்நாயக்கன் பட்டியில் உள்ள தனி யார் பட்டாசு ஆலையில் வேலை செய்து வரு கிறார்.  இந்நிலையில், வழக்கம் போல தனது  நண்பரான தருண் என்ப வருடன் வேலைக்கு சென்றுள்ளனர். மாலை யில் வீட்டிற்கு ஒரே  இரு சக்கர வாகனத்தில்  திரும்பிக் கொண்டிருந் தார். பெத்துலுபட்டி தரைப்பாலம் அருகே இயற்கை உபாதையை கழிப்பதற்காக வண் டியை நிறுத்தியுள்ளனர்.  அப்போது, சாலை யோரத்தில் பட்டாசுக் கழிவுகள் எரிந்து கொண் டிருந்தது. அதிலிருந்து நெருப்பானது, வனராஜா வின் இரு சக்கர வாக னத்தில் பற்றியது. கண் இமைக்கும் நேரத்தில் வாகனம் முழுவதும் தீயா னது கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இந்தநிலையில், வன ராஜா தனது வண்டியை பாதுகாப்பதற்காக அரு கில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வனராஜாவின் மீதும் தீப்பற்றியது.  இதில் அவர் படுகாய மடைந்தார். இதை யடுத்து அக்கம்பக்கத்தி னர் அவரை மீட்டு சிவ காசி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.  இதுகுறித்து வச்சக் காரப்பட்டி காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

நூறு நாள் வேலை சம்பளத் தொகை 4 மாதமாக வழங்காமல் இருப்பதா?
விவசாயத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர், மார்ச் 11-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஒன்றியம், பூவாணம் ஊராட்சி  மக்களின் அடிப்படை வசதிகளை நிறை வேற்றக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு மற்றும் பூவாணம் ஊராட்சி கிராம மக்கள் சார்பில் திங்களன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. பூவாணம் ஊராட்சி மன்ற அலுவல கம் எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேதுபாவா சத்திரம் ஒன்றியத் தலைவர் வழக்குரை ஞர் வீ.கருப்பையா தலைமை வகித்தார். சங்க ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.  செந்தில்குமார், வி.ச. ஒன்றியப் பொருளா ளர் பி.சத்தியசீலன், ஒன்றியக் குழு உறுப் பினர்கள் நவநேசன், பி.சுப்பிரமணியன், மாதர் சங்கம் ஒன்றியச் செயலாளர் ஏ. மேனகா, மாற்றுத்திறனாளிகள் சங்க  ஒன்றியத் தலைவர் எஸ்.ஜெ. ராஜேஷ்  கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.  அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.  பூவாணம் ஊராட்சியில் குடிநீர், தெரு விளக்கு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.  ஆதிதிராவிடர் மயானத்திற்கு செல்லும் சாலையை புதிதாக அமைத்துத் தர வேண்டும். பகுதிநேர அங்காடியை உடனடி யாக செயல்படுத்த வேண்டும். நான்கு மாதமாக நிலுவையில் உள்ள நூறு நாள்  வேலைத்திட்ட சம்பளம் பாக்கியை வழங்க  வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் மிக வும் பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் பகுதிக்கு, கான்கிரீட் சாலை அமைத்து தர  வேண்டும்.  குடிமனை மற்றும் குடிமனைப் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.  அரசு மருந்தகத்தை மேம்படுத்த வேண்டும். நூலக வசதி ஏற்படுத்த வேண்டும். ஸ்ரீ அக்னி காளியம்மன் திருக்கோவிலுக்கு செல்ல சாலை வசதி அமைத்து தர வேண்டும். மாற்றுத் திற னாளிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த  சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலு வலர் சடையப்பன், வருவாய் ஆய்வாளர்  உள்ளிட்ட அலுவலர்கள் பேச்சு வார்த்தை  நடத்தினர். அதில், மார்ச் 14 அன்று பட்டுக் கோட்டை வட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப் படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.