மன்னார்குடி, ஜூன் 23 - 2021-2022 கல்வி ஆண்டின் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மன்னார் குடி அசோகா சிசுவிஹார் மெட்ரிக் பள்ளி மீண்டும் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள் ளது. இதில், என்.பி.சஹானா 500-க்கு 484 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஆர்.அசின் 483 மதிப் பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஏ.ஹரிணிதா 469 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். ஏ.ரித்தீஷ், என்.பி.சஹானா, ஆர்.அசின், எம்.ரித்திக், ஆர்.கே.ரதீஷ்க ஜானன் ஆகிய மாண வர்கள் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப் பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் எம்.ஜி. வெங்கடராஜன், ஆசிரி யர்கள், கல்வியாளர்கள், பெற் றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.