districts

img

ரசாயன கற்களால் பழுக்க வைத்த மாம்பழம்

தென்காசி, ஏப்.28 - தென்காசி மாவட்டம் செங் கோட்டை வட்டத்தில், செங்கோட்டை, புளியரை, வல்லம் பார்டர் உள்ளிட்ட பகுதிகளில் மாம்பழங்கள் சேமித்து வைக்கக்கூடிய குடோன்கள் ஏராள மாக உள்ளன.   இந்த குடோன்களில் மாம்பழங்கள் தற்போது அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டு ரசாயன கற்கள் தடவி,  செயற்கையாக பழுக்க வைக்கப்படு கின்றன. லாபத்திற்காக செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டு, பிற மாவட் டங்கள், மாநிலங்கள் மற்றும் தேசிய அளவில் மாம்பழம் ஏற்றுமதி செய்யப் படுகிறது. செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களால் உடலுக்கு கேடு ஏற்படுவதோடு, சில சமயத்தில் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. செயற்கையாக மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவது குறித்து தென் காசி உணவு பாதுகாப்புத் துறை அலுவ லர் நாக சுப்பிரமணியத்திற்கு ரகசிய  தகவல் கிடைத்தது. அதன் அடிப்படை யில் உணவுப் பாதுகாப்புத் துறை அதி காரிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில், செங்கோட்டை வட்டம் முழு வதும் மாம்பழ குடோன்களில் அதிரடி யாக சோதனை நடத்தினர்.  சோதனையில், வல்லம் பகுதியில் இயங்கி வரக்கூடிய டி.எம். என்ற தனி யார் குடோனில் ஒரு டன்னுக்கும் மேற் பட்ட செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த பழங்கள் அனைத்தும் கைப்பற்றப் பட்டு, உடனடியாக அழிக்கப்பட்டன. உணவு பாதுகாப்புத் துறை அலுவ லர்கள் மேலும் குடோன் உரிமையாள ரிடம், “மீண்டும் இது போன்ற செயலில்  ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுத்து,  அபராதமும் விதிக்கப்படும்” என எச்சரித்தனர்.