districts

திருச்சி முக்கிய செய்திகள்

திருச்சி காவிரிக் கரையில் முதலைகள் நடமாட்டம்?

திருச்சிராப்பள்ளி, செப்.1 - திருச்சி, மேலசிந்தாமணி, மகாத்மா காந்தி படித்துறை யில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் நீராடிச் செல்வது வழக்கம். கடந்த 4,5 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் முதலை நடமாட்டம் இருந்து வந்தது. இந்நிலையில், ஆற்றங்கரை யோரம் சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள முதலைக்குட்டி ஒன்று  வலையில் சிக்கிய நிலையில் இறந்து கிடந்தது. இதனால்,  அப்பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பது மீண்டும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆற்றின் மையத்தில் உள்ள நாணல் புதரில் வசிக்கும்  முதலைகள், குட்டிகளை ஈன்றிருக்கலாம் என கூறப்படு கிறது. இதுவரை அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் முதலைகளைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் பல்கலை.யில் மனவளம் சிறப்புக் கருத்தரங்கம் 

தஞ்சாவூர், செப்.1-  தமிழ்ப் பல்கலைக்கழக சமூக அறிவியல் துறை மற்றும்  திருச்சி ஆத்மா மருத்துவமனை இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், மாணவர்களின் மனவளம் காக்கும் பொருட்டு மனவள மையம் உருவாக்கப்பட்டுள்ளது.   இம்மையத்தின் சார்பாக, “வாழ்க்கையை எதிர்கொள் ளும் நெறிமுறைகள்” என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திரு வள்ளுவன் தலைமை வகித்துப் பேசினார். திருச்சி ஆத்மா  மருத்துவமனை சமூக மனநல ஆலோசகரும், மனவள  மைய திட்ட இயக்குநருமான ஜா.கரண்லூயிஸ் சிறப்புரை யாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் முதுகலை முதலாமாண்டு மற்றும் ஒருங்கிணைந்த முதலாமாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். 

ஏரியில் மூழ்கி மாணவர் பலி

அரியலூர், செப்.1 - அரியலூர் கள்ளக்குடி தெருவைச் சேர்ந்தவர் சபரிவாசன்  (20). இவர் கீழப்பழுவூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி யில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.  இந்நிலையில் இவர் தனது நண்பர்களுடன், தத்தனூரில்  உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தொழில்துறை கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளனர். பின்னர் உடையார் பாளையத்தில் உள்ள பெரிய ஏரியில் சபரிவாசன் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சபரிவாசன் தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை மீட்க நண்பர்கள் முயற்சித்தும், முடியாத நிலை யில் கரைக்குத் திரும்பி சத்தமிட்டுள்ளனர். பின்னர் அருகில்  இருந்தவர்கள் தண்ணீரில் இறங்கி சபரிவாசனை தேடியுள்ள னர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.  இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை யினர் ஏரியில் இறங்கி சபரிவாசனை தேடும் பணியில் ஈடுபட்ட  நிலையில், சபரிவாசன் சடலமாக மீட்கப்பட்டார். 

கொள்ளிடம் ஆற்றில்  கிணறு அமைக்க எதிர்ப்பு

பாபநாசம், செப்.1 - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஜல் ஜீவன்  மிஷன் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் நகராட்சி, வேளாங் கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு பேரூராட்சிகள், 980 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தை அடுத்த வடசருக்கை கொள் ளிடம் ஆற்றில் கிணறு அமைக்கும் பணி வியாழனன்று தொடங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வாழ்க்கை, சருக்கை மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் பலர் திரண்டனர். அவர்கள், வாழ்க்கை - தூத்தூர் இடையே கதவணை அமைத்தப் பின் கிணறு அமைக்க வலியுறுத்தினர். இதனால் கபிஸ்தலம் சரக வருவாய்த் துறையினர், காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். கும்பகோணம் ஆர்.டி.ஓ  பூர்ணிமா, பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, பாபநாசம் டி.எஸ்.பி  பூர்ணிமா ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். தொடர்ந்து, எதிர்ப்பு தெரிவித்த 26 பேர் கைது செய்யப் பட்டனர்.

செப்.7 பெரம்பலூரில் கல்வி கடன் முகாம்

பெரம்பலூர், செப்.1 - தமிழக அரசின் ஆணைப்படி மாவட்ட நிர்வாகம், மாவட்ட  முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து  நடத்தும் கல்வி கடன் முகாம் செப்டம்பர் 7 அன்று பெரம்ப லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு  நடைபெற உள்ளது. இந்த கல்வி கடன் முகாமில் தொழில்முறை படிப்பு பயிலும்  மற்றும் கல்வி கடன் பெற விரும்பும் அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம்.  கலந்துகொள்ள வரும் மாணவர்கள், தங்கள் மற்றும்  பெற்றோர்களின் பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாணவர்களின் 10,12 ஆம்  வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மாற்றுச்  சான்றிதழ், குடும்ப வருமான சான்று, கல்லூரி சேர்க்கைக் கான சான்று, கல்விச்சான்று, கல்லூரி கட்டண அறிக்கை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு  வர வேண்டும்.  கல்விக் கடன் முகாமிற்கு வருவதற்கு முன்பு, https:// www.jansamarth.in என்ற இணையதளத்தில் விண்ணப் பித்து, விண்ணப்பித்த படிவத்தின் நகலை கொண்டு வர  வேண்டும். அனைத்து மாணவ, மாணவிகளும் இம்முகா மினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.

ஹமாத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில்  ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

தஞ்சாவூர், செப்.1-  முஸ்தபாவின் ஹமாத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த வர்கள் புகார் அளிக்கலாம் என தஞ்சை  பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறை யினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில்வே ஸ்டேசன் ரோடு பகுதியில் வசிக்கும் முஸ்தபா  என்பவர், ஹமாத் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவ தாகவும், அதில் முதலீடு செய்தால், நிறுவ னத்தின் லாபத் தொகையில் அதிக பங்கு  தருவதாகவும், மேலும் இரண்டு வருடத்தில்  முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக கிடைக் கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி அவரிடம் பாபநாசம் தாலுகா  ராஜகிரி ஏ.பி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த  முகமது பாரூக் என்பவரது மகள் பைரோஜ்  நிசார் ரூ.8 லட்சம் பணத்தை அளித்துள் ளார். பணத்தை பெற்றுக் கொண்ட முஸ்தபா  பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி விட்ட தாகவும், தனது பணத்தை மீட்டுத் தருமாறும்  பைரோஜ் நிசா தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கு தற்போது தஞ்சாவூர் பொரு ளாதார குற்றப்பிரிவிற்கு மாறுதல் செய்யப் பட்டு புலன் விசாரணையில் இருந்து வரு கிறது. இந்த வழக்கில் முஸ்தபாவின் ஹமாத்  டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தில் முதலீடு  செய்து, பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்கள், தங்களது முதலீட்டு தொகைகள் திருப்பித் தரப்படாமல் ஏமாற்றப்பட்டிருந்தால், அவர் கள் தஞ்சாவூர், மருத்துவக் கல்லூரி சாலை, 57-பி முதல் தெரு, ராஜப்பா நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து உரிய ஆவணங்களுடன் ஆஜராகி புகார் அளிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை  ஊழியர்கள் போராட்டம்

கும்பகோணம், செப்.1- கள்ளக்குறிச்சி வட்டாட்சியராக மனோஜ் முனியன் என்பவர் பணி புரிந்து வருகிறார். அவர்  அண்மையில் ஒரு வழக்கு சம்பந்தமான நீதி மன்ற உத்தரவை அமல் படுத்தி பணியாற்றி யுள்ளார். ஆனால் அவர்  தன்னிச்சையாக செய்த தாக கூறி, வட்டாட்சியர் மனோஜ் முனியனை இடைக்கால பணி நீக்கம்  செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.  இதை கண்டித்தும், வட்டாட்சியர் மனோஜ் முனியனின் இடைக்கால பணிநீக்க உத்தரவை ரத்து செய்திடக் கோரி யும், தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவ லர் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலக சங்க கும்பகோணம் வட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். 

தோழர் எம்.ஆர்.அப்பன் நினைவு தினம்

கும்பகோணம், செப்.1- தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவ ரான தோழர் எம்.ஆர்  அப்பன் நினைவு நாளை  முன்னிட்டு, வியாழ னன்று தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கத்தின் சார்பாக கும்பகோணம் வட்டம் சார்பில் நினை வஞ்சலி செலுத்தப்பட் டது. இதில் கும்பகோ ணம் வட்டத் தலைவர் வெங்கடேசன், வட்டச் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தோழி விடுதியில் தங்கியுள்ள மகளிர் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

திருச்சிராப்பள்ளி, செப்.1- தமிழ்நாடு முதலமைச்சர், பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் தேவைகளை  உணர்ந்து,  பொருளாதார ரீதியாக நலிவுற்ற  மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர்களுக் கான மகளிர் தங்கும் விடுதிகளை தமிழ்நாட் டின் பல்வேறு மாவட்டங்களில் அமைக்க உத்தரவிட்டார்.  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அபிஷே கபுரத்தில் ரூ.5 கோடியே 65 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மகளிருக்கான விடுதிக் கட்டடத்தினை தமிழ்நாடு முதல மைச்சர் கடந்த 13.7.2023 அன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  இவ்விடுதி 106 படுக்கை வசதியுடன் கட்டப் பட்டுள்ளது. இருவர், நால்வர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த விடுதி யில் அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரி யும் பெண்கள், கல்லூரியில் பயிலும் பெண்கள், போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும்  பெண்கள் என பலரும் வசித்து வருகின்றனர். இந்த விடுதியில் பயோமெட்ரிக் கை ரேகை, பார்க்கிங், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,  தொலைக்காட்சி, நீர் கொதிகலன், குளிர்சாத னப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், குளிர்பதனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை  தமிழ்நாடு அரசு மகளிருக்காக செய்து கொடுத்துள்ளது.  மேலும் www.tbwhc.in என்ற இணைய தளம் வாயிலாக படுக்கை அறைகள் இருப்புத் தன்மை  அறிந்து, தேவைக்கேற்ப முன்பதிவு  செய்து கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. வருடங்கள், மாதங்கள் மட்டுமின்றி வாரங்கள், ஓரிரு நாட்கள்கூட மகளிர் இவ்விடுதிகளில் தங்கிட வசதி செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையம்,  பேருந்து நிலையம், ரயில் நிலையம் என அனைத்தும் மிக அருகில் அமைந்துள்ளது. இத்தோழி விடுதியில் தங்கியுள்ளோர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

செப்.7 மறியல் போர்: நாகையில் தீவிர தயாரிப்பு

நாகப்பட்டினம்,  செப்.1 - விலைவாசி உயர்வு,  பெருகிவரும் வேலை யிழப்பு உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து செப்டம்பர் 7 அன்று மாவட் டம் முழுவதும் ரயில் மறியல்  மற்றும் ஒன்றிய அரசு அலு வலகங்கள் முன்பு மறியல் நடைபெற உள்ளது. இதில், நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நாகை மாலி எம்எல்ஏ, கீழ்வேளூர் வடக்கில் -வி.மாரிமுத்து சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர், கீழ்வேளூர் தெற்கில் (வலிவலம்) - எம். மாவட்டச் செயற்குழு உறுப் பினர் முருகையன், கீழை யூர் மேற்கில் - மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.சுப்பிர மணியன், கீழையூர் கிழக்கில் - மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ப.சுபாஷ்சந்திர போஸ், தலைஞாயிறில் - மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி. லதா, வேதாரண்யம் வடக்கில் - மாவட்ட செயற் குழு உறுப்பினர் கோவை  சுப்ரமணியன், வேதாரண் யம் தெற்கில் - மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.அம்பி காபதி, திருமருகலில் - மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.வேணு ஆகியோர் தலைமை ஏற்கின்றனர்.

அரசு பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

கும்பகோணம், செப்.1- கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து, அறிவியல் தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான 3  நாள் பயிற்சி முகாமை தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணத்தில் நடத்தின. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாலமுரு கன் தலைமை வகித்து பேசினார். கல்லூரி யின் கல்விப் புலத்தலைவர் ருக்மாங்கதன் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். முகாமின் துவக்க விழாவில் கும்பகோணம் அட்லஸ் ஹவுஸ் இண்டீரியர் நிறுவனர்  சிராஜுதீன் சிறப்புரையாற்றினார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு  பொறியியல் கல்லூரிகளில் இருந்து சுமார்  150 மாணவர்கள் கலந்து கொண்டனர். முகா மின் வாயிலாக தேசிய தகுதி வாய்ந்த திறன் பயிற்சிகளை மாணவர்கள் பெறுவதுடன், புதுமையான அணுகுமுறைகளில் தொழில் முனைவு அனுபவம் மற்றும் உயர் தொழில் நுட்ப திறன் தேவைப்படும் வேலை வாய்ப்பை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டனர். முகாமின் மூன்றாம் நாள் நிறைவு விழா வில், பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலா ளர் ஆல்வின் மார்ட்டின் ஜோசப் ஆல்பர்ட் உரையாற்றினார். இதில் பங்கேற்ற மாணவர் களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு புதிய பேருந்து வசதி தொடக்கம்

தஞ்சாவூர், செப்.1- தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வழியாக தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு புதிய பேருந்து வசதி புதன்கிழமை தொடங்கப்பட்டது. விடுதிகளில் தங்கிப் படிக்கும் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், பொதுமக்கள் வசதிக்காக வி74ஜி,  எல் 74, ஏ 6 ஆகிய பேருந்துகள் தஞ்சாவூர் பழைய பேருந்து  நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம், தமிழ்ப் பல்கலைக்கழக மகளிர் மற்றும் ஆடவர் விடுதி வழியாக  நாள்தோறும் காலை, பிற்பகல், மாலை என 3 வேளை களிலும் கூடுதல் பேருந்து வசதி தொடங்கப்பட்டது. பேருந்து சேவையை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத் தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் வி.திருவள்ளுவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) சி. தியாகராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் கே.இளங்கோவன், துணை மேலா ளர்(வணிகம்) எஸ்.செந்தில்குமார், கோட்ட மேலாளர் ஜெ.பாலமுருகன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.  முருகன், தஞ்சாவூர் கிளை மேலாளர் ஏ.பிரகாஷ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலத்திலிருந்து அரியலூருக்கு கும்பகோணம் வழியாக  புதிய ரயில் பாதை அமைக்க கோரிக்கை

கும்பகோணம், செப்.1 -  தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க 60 ஆம் ஆண்டு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு சங்க துணை தலைவர் ஜமீல் தலைமை வகித்தார். பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் சரவணன் வரவேற்றார். தஞ்சை மாவட்ட செயலாளர் கிரி ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில், தஞ்சை - விழுப்புரம் இரட்டை வழி ரயில் பாதைக்கு விரை வில் ஒப்புதல் வழங்க வேண்டும். மேலும் அதற்கான பணிகளை உடனே  தொடங்கி, அதனை 2028 ஆம் ஆண்டு மகாமக திருவிழாவுக்கு முன்பு  நிறைவேற்ற வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு  பணிகளை தொடங்க வேண்டும். கும்பகோணம், தஞ்சை வழியாக பழனி,  பொள்ளாச்சி, கோவைக்கு நேரடி ரயில் சேவை வழங்க வேண்டும்.  தற்போது கும்பகோணம், தஞ்சை வழியாக இயக்கப்படும் அகம தாபாத் - திருச்சி மற்றும் மும்பை - தூத்துக்குடி சிறப்பு ரயில்களை நிரந்தர  ரயிலாக இயக்க வேண்டும். எர்ணாகுளம்- தாம்பரம் இடையே கும்பகோ ணம், தஞ்சாவூர் வழியாக புதிய ரயில் சேவை தொடங்க வேண்டும். தஞ்சை  - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை விரைவாக அமைக்கப்பட வேண்டும்.  நீடாமங்கலத்தில் இருந்து அரியலூருக்கு, கும்பகோணம் வழியாக  புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் நடராஜகுமார் நன்றி கூறினார்.

நாஞ்சிக்கோட்டை சாலையில்  மழைநீர் வடிகால் வாய்க்காலை முறையாக அமைக்க கோரி மறியல்

தஞ்சாவூர், செப்.1-  மழைநீர் வடிகால் வாய்க்கால் முறையாக அமைக் கப்படாததை கண்டித்து வியா ழக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அகலப்படுத்தப்பட்டு, சாலையின் இருபுறமும் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருணா வதி நகர் அருகே சாலையின் மேற்கு பகுதியில் மழைநீர் வடி கால் அமைக்காமல், சாலை யின் கிழக்குப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலோடு இணைக்கும் வகையில், சாலையின் குறுக்கே வடிகால்  அமைக்க பள்ளம் தோண்டப் பட்டுள்ளது. அதற்கான பணி களும் நடைபெற்று வருகின்றன. இதனை அந்தப் பகுதி பொதுமக்கள் கண்டித்தும், சாலையின் இருபுறமும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை நாஞ்சிக் கோட்டை புறவழிச்சாலை வரை தொடர்ந்து அமைக்க வேண்டும். சாலையின் குறுக்கே வடிகால் அமைக்க கூடாது என வலியுறுத்தியும் வியாழக்கிழமை  கருணாவதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடு பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத் துக்கு வந்த தமிழ்ப் பல்கலைக் கழக காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நட வடிக்கை எடுப்பதாக அளித்த னர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

காலை உணவு வழங்கலை கேவலமாகச் சித்தரிப்பதா?

மாணவர்கள் போராட்டம்

பெரம்பலூர், செப்.1 - தமிழகம் முழுவதும் 1 முதல் 5 ஆம் வகுப்பு  வரை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் காலை உணவு திட்டம்  செயல்படுத்தப்படுகிறது.  இந்நிலையில், 31.8.2023 அன்று வெளி யான தினமலர் சேலம் பதிப்பு நாளிதழில், காலை உணவு திட்டத்தை கேவலமாக சித்தரித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தி வெளியிட்ட தினமலர் நாளி தழை கண்டித்து பெரம்பலூர் பழைய  பேருந்து நிலையம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் பச்சையப்பன், சண் முகம், சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.