பாபநாசம், ஏப்.27-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு ஆலோ சனை கூட்டம் பள்ளித் தலைமையாசிரியர் மணியரசன் தலைமையில் நடைபெற்றது.
பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் 10,11, 12 -ம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதாத மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை வரவழைத்து சிறப்புத் தேர்வு எழுத அறிவுரை வழங்கப்பட்டது.
12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக உயர் கல்வி படிப்ப தற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் முத்துலட்சுமி, துணைத் தலைவர் சங்கீதா, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் செங்குட்டுவன், உடற் கல்வி ஆசிரியர் செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.