மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல் பாபநாசம், மார்ச் 17- தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வந்து சென்றதும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது சந்தேகங்களை எழுப்புவதாகவும், இதற்கு தேர்தல் ஆணையம் விடை தர வேண்டு மெனவும் மனிதநேய மக்கள் கட்சியின் தலை வரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான ஜவா ஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பெருமழை, வெள்ளத்தில் தத்தளித்த போது, ஆறுதல் படுத்தக்கூட வரா தவர், தமிழ்நாட்டிற்கான நிவாரண உதவியை சிறிது கூட வழங்காதவர் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடி கடந்த சில வாரங்களில் தொடர்ந்து ஐந்து முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். அவரது இறுதி வருகையின் போது, தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் தேதியை அறிவிப்பது, அதிலும் முதல் கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் என்று அறிவிப்பது பலத்த சந்தேகங்களை ஏற் படுத்தியிருக்கிறது. இதைத் தற்செயலான தாக பார்க்க முடியவில்லை. இது திட்டமிட்டு நடந்த நிகழ்வாகவே பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டிருக்கிற ஏப்ரல் 19 ஆம் தேதி வெள்ளிக் கிழமை வருகிறது. வெள்ளிக்கிழமை என்பது முஸ்லிம்களுக்கு ஒரு புனிதமான நாளாகும். வேறு பல நாட்கள் இருக்கும் போது, முஸ்லிம் கள் அதிகமாக வாக்களித்து விடக் கூடாது என்ற எண்ணத்திலேயே வெள்ளிக்கிழ மையை தேர்ந்தெடுத்தது போன்ற ஒரு தோற்றமும் ஏற்படுகிறது. இந்த ஐயங்களுக்கு தேர்தல் ஆணையம் விடை தர வேண்டும். தேர்தல் தேதிக்கும், முடிவுகள் அறி விக்கப்படும் தேதிக்கும் மிக நீண்ட இடை வெளி இருக்கிறது. இந்த தேர்தல் நியாய மாக நடக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் அதிகம் உள்ளது. இதற்கான விடையை தேர்தல் ஆணையம்தான் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.