உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொச்சி, அக்.29- மலப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கியை கேரள வங்கியுடன் இணைப் பதை கேரள உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இணைப்புக்காக மாநில அரசு கொண்டு வந்த திருத்தம் சட்டப் பூர்வமானது என நீதிமன்றம் கூறியது. இந்த திருத்தம் மத்திய வங்கிச் சட்டத்திற்கு முரணாக இருப்பதால் இணைப்பு செல்லாது என்ற ரிசர்வ் வங்கி வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது. இணைப்புக்கு முன் பொதுக்குழு கூட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் மத்திய வங்கித் திருத்தத் திற்கு மாநில சட்டம் எதிரானது என்ற மனுதாரர்களின் கோரிக்கையையும் நீதிபதி பி.கோபிநாத் நிராகரித்தார். கேரளத்தில் உள்ள 13 மாவட்ட கூட்டுறவு வங்கிகளை (டிசிபி) இணைத்து கேரள வங்கி உருவாக்கப் பட்டது. 2019 டிசம்பரில் முதல்வர் பினராயி விஜயன் இந்த வங்கியை துவக்கி வைத்து ‘கேரளத்தின் மிகப்பெரிய வங்கியாக இது திகழும்’ என்றார். யுடிஎப் தலைமையில் செயல் பட்டு வந்த மலப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கி கேரள வங்கியுடன் இணையாமல் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சட்டமன்றத்தில் கூட்டுறவு சட்டத்தில் திருத்தம் மேற் கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து 2023 இல் மலப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கியை கேரள வங்கியு டன் இணைப்பதற்கான உத்தரவை கூட்டுறவு சங்கப் பதிவாளர் பிறப்பித் தார். இந்த உத்தரவை எதிர்த்து மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 93 தொடக்க கூட்டுறவு சங்கங்கள் மற்றும் யுடிஎப் தலைவர் யு.ஏ.லத்தீப் எம்.எல்.ஏ., பி.டி.அஜயமோகன் ஆகி யோர் உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். ரிசர்வ் வங்கி உரிமத்தின் கீழ் செயல் படும் வங்கிகளுக்கு மத்திய சட்டம் பொருந்தும் என்ற மனுதாரர்களின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. மத்திய சட்டம் வங்கி விவகாரங் களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,
கூட்டுறவு சங்கங்களின் இணைப்புக்கு மாநில சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த மனுவில், முதன்மை வங்கி கள் மத்திய சட்டத்தை கடைப்பிடிக்கா விட்டால், மத்திய வைப்பு நிதி உத்தர வாதத் திட்ட விதிகளின்படி பலன் களைப் பெற முடியாது என்றும், இணைப்பிற்கு கூட்டுறவுப் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது. பதிவாளரின் உத்தரவு கூட்டுறவு திருத்தச் சட்டத்தால் ஆதரிக்கப்பட்டது என்றும், கூட்டுறவு என்பது மாநில உரிமை என்பதால் இந்த திருத்தம் சட்டப் பூர்வமானது என்றும் நீதிமன்றம் கூறியது. மலப்புரம் மாவட்ட வங்கிக்கு வழங் கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட வில்லை என்றும், இணைப்புக்கு அவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் ரிசர்வ் வங்கியின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. அரசாங்கத் திற்காக ஏ.ஜி.கே. கோபாலகிருஷ்ண குருப், அரசின் சிறப்பு பிளீடர் பி.பி.தாஜூதீனும் ஆஜராகியிருந்தனர். கூட்டுறவு பதிவாளரின் தற்காலிக இணைப்பு உத்தரவை மனுதாரர்கள் முன்பு எதிர்த்தனர். இந்த மனுக்களை ஒற்றை பெஞ்ச் மற்றும் டிவிஷன் பெஞ்ச் நிராகரித்ததால், உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்யப் பட்டது. கூட்டுறவு பதிவாளரின் இறுதி உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர லாம் என்று கூறி உச்சநீதிமன்றம் தள்ளு படி செய்தது. அதைத் தொடர்ந்து மனுதாரர்கள் மீண்டும் உயர் நீதி மன்றத்தை அணுகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனுக்கள் மீது உயர்நீதிமன்ற உத்தரவு தற்போது வந்துள்ளது.