பள்ளிக்கல்வி ஊழியர் சங்க மாநாடு கோரிக்கை மதுரை, செப்.10- தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழி யர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள் ளிக்கல்வி அனைத்து (தொகுப்பூதிய ஊழி யர்கள்) ஊழியர் சங்க மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. அமைப்பின் கோரிக்கை விளக்க மாநாடு சனிக்கிழமையன்று மதுரையில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் ஜே.வாலன்றின் பிரிட்டோ, மாநிலத் துணைத்தலைவர் க. விஜயலட்சுமி, மாநிலத் துணைச் செயலா ளர் ஆர்.துரைப்பாண்டி, மாநிலப் பொதுச் செயலாளர் க.லெட்சுமணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.செல்வம் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். அரசு ஊழி யர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஜே. மகேந்திரன், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பி.திருப்பதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த மாநாட்டில் ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர், தில்லி உள்ளிட்ட மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களைப் பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். பள்ளிக் கல்வித் துறை யோடு இணைத்துப் பணிப் பாதுகாப்பை உறு திப்படுத்த வேண்டும். ஊதிய நிர்ணயம் செய்து குறைந்தபட்சமாக மாத ஊதியம் ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப் பணி யிடத்தில் விருப்பப் பணி மாறுதல் வழங்கப் படும் எனக் கூறியதைத் தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும். தினக் கூலி ஊழி யர்களைத் தொகுப்பூதிய ஊழியர்களாக்க வேண்டும். வருடாந்திர மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தில் தொகுப்பூதியர்களையும் சேர்க்க வேண்டும். வாழ்வாதாரம் பாது காக்கப்பட குடும்பப் பாதுகாப்பு நிதி வழங்க வேண்டுமென வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.