districts

img

மாணவர்கள் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்

மதுரை, அக்.21- மாணவ, மாணவிகள் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் தெரிவித்துள்ளார்.   மதுரை மாநகராட்சி தமுக்கம் மைதா னத்தில் நடைபெற்று வரும் மதுரை புத்தகத் திருவிழாவினை வெள்ளியன்று காண வந்த கைலாசபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி மற்றும் இதர பள்ளியை சார்ந்த சுமார் 200 மாணவர்களுக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் (விலை இல்லாமல்) புத்தகங்களை வழங்கினார்.  அப்போது அவர் பேசுகையில், ‘‘ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் அறிவாற்றல், பொது அறிவு, நற்பண்பு, புதிய சிந்தனைகள் போன்ற பண்புகள் வளர்வதுடன் வாழ்வில் உயரிய இடத்தை கண்டிப்பாக அடைய முடியும்’’ என கூறினார்.   நிகழ்வில் மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, மாநகராட்சி கல்வி அலுவலர் மாரிமுத்து, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர் பொன்மணி, மாமன்ற உறுப்பினர்கள் முருகன், லோகமணி உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்,  ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.