districts

‘எங்களின் ஒற்றுமையில் வேறுபாடு இல்லை’ பிற்போக்கு சக்திகளுக்கு எடுத்துரைத்த மதுரை சித்திரைத் திருவிழா

தமிழர்களின் பண்பாட்டு தலை நகரமாய் விளங்கும் மதுரை யில் நடைபெறும் சித்திரை திரு விழாவுக்கு எப்போதும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மற்ற திருவிழாக்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் பங்கேற்  பார்கள்.  ஆனால், சைவ-வைணவ சண்டை யிட்டு கொண்டிருந்த காலத்தில் சைவ  திருவிழாவான மீனாட்சி கல்யாணம், வைணவ திருவிழாவாக இருந்த அழகர் ஆற்றில் இறங்கும் ஊர்வலம் என தனித்தனியாக இருந்த விழாக்களை மது ரையினை ஆண்ட திருமலை நாயக்கர்  மன்னர் தனது ஆட்சியில் சைவ-வைணவ  சமயத்தினை ஒன்றிணைக்கும் திருவிழா வாக மாற்றி இந்து மதத்தில் பிளவு பட்டுக் கிடந்த சைவ-வைணவத்தை ஒன்றிணைத்தார்.  இன்றைக்கு அதை சைவ-வைணவ மட்டும் அல்ல; மதங்கள் கடந்து மக்களை  கொண்டாட வைக்கும் ஒரு திருவிழா வாக தமிழ் பண்பாட்டின் மீது காதல் கொண்டிருக்கும் அனைவருக்கும் இதில்  பங்கேற்க வைக்கும் திருவிழாவாக மதுரை மக்கள் சித்திரை திருவிழாவை மாற்றியுள்ளனர். 

சாதி, மதமின்றி கொண்டாடும் திருவிழா 

எனவே, இந்த திருவிழா அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்கி றது. இஸ்லாமியர்களும் இதனை தங்க ளது திருவிழாபோல கொண்டாடி வரு கின்றனர். சித்திரை திருவிழாவை இந்து களின் திருவிழாவாக பார்க்காமல் ஒற்று மையின் திருநாளாக மதுரை மக்கள் பார்க்கின்றனர்.  அதற்கு உதாரணமாக மீனாட்சி திருக்  கல்யாண ஊர்வலத்தில் ஒரு இஸ்லா மிய சகோதரி தன்னுடைய குழந்தைக்கு மீனாட்சி அம்மன் வேடம் அணிந்து ஊர்வலத்தில் அழைத்து வருகிறார்.  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் காட்சி யை காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்து கிடக்கும் வைகையாற்றில், ஒரு  இஸ்லாமிய குடும்பம் கள்ளழகர் திரு விழாவை காணவந்த காட்சி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதை பலரும் தங்களுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்தனர். 

பக்தர்களின் பசி, தாகத்தை தீர்க்கும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும்...

றிஸ்தவர்களும்... இந்த ஒற்றுமையினை சாதி, மதம்  கடந்து கொண்டாடுகின்றனர் என்றால்  இதைவிட சமத்துவம் என்ன வேண்டும்.  இவ்வளவு பண்பாட்டு பாரம்பரியமிக்க இந்த திருவிழாவில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தங்களை இணைத் துக்கொண்டு வெயிலையும் பொருட் படுத்தாது வரும் பக்தர்களின் பசி,  தாகத்தை சமாதானம் செய்ய ஆங் காங்கே தண்ணீர் பந்தல்களை வைத்து  விநியோகித்து வருகின்றனர். இது திரு விழாவில் பங்கேற்ற அனைவரிடை யேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.  இதன் மூலம் தமிழ்நாடு வலுவான மதநல்லிணக்கம் கொண்ட மாநிலம் என்பது மீண்டும் ஒரு முறை பறை சாற்றப்பட்டுள்ளது. எந்த மதங்களாக நாங்கள் இருந்தாலும் அது எங்களுடைய வழிபாடுகளில் மட்டும்தான் வேறுபாடு கள் இருக்குமேயன்றி எங்களின் ஒற்று மையில் வேறுபாடு இல்லை என சில  பிற்போக்கு சக்திகளுக்கு எடுத்து ரைக்கின்றது. -ஜெ.பொன்மாறன்