districts

img

எய்டு இந்தியா சார்பில் கல்வி உதவித் தொகையை எம்.சின்னதுரை எம்எல்ஏ., வழங்கினார்

புதுக்கோட்டை, மே.2:-  எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் ஏழை மாணவிகளுக்கான கல்வி உத வித்தொகையை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வியாழக்கிழமை வழங்கினார் எய்டு இந்தியா நிறுவனம் சார்பில்  ஏழை மாணவிகளுக்கான கல்வி உத வித் தொகை வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு பல் மருத்துவ மாணவி தர்ஷினிக்கு ரூ.50 ஆயிரம், நர்சிங் மாணவி ஸ்ரீவேதாவுக்கு ரூ.45 ஆயிரம் என எய்டு இந்திய நிறுவனத்தின் சார்பில் ரூ.95 ஆயிரம் மதிப்பிலான காசோலையை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை வழங்கினார். அவர் பேசும் போது, எய்டு இந்தியா நிறுவனம் கஜா புயல், கொரோனா மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு செய்த நலத்திட்டப் பணிகளை விளக்கிப் பேசினார். நிகழ்விற்கு கவிஞர் எஸ்.கவி வர்மன் தலைமை வகித்தார். முன்ன தாக எய்டு இந்தியா நிறுவன மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் செ.பிச்சம்மாள் வரவேற்க, ராதா நன்றி கூறினார். எழுத்தாளர் ஐ.வி.நாக ராஜன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலளார் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் டி.சலோமி, விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலளார் ஏ.ராமையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.