districts

img

பள்ளி வகுப்பறைகளுக்கு எம்.சின்னதுரை எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

புதுக்கோட்டை, நவ.24 - அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி வகுப்பறை களுக்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நபார்டு திட்டத்தின்கீழ் ரூ. 148.26 லட்சம் மதிப்பீட்டில் 7  புதிய வகுப்பறைகள் கட்டு வதற்கு நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. இக்கட்டிடம்  கட்டுவதற்கு கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை வெள்ளிக் கிழமை அடிக்கல் நாட்டி னார். இந்நிகழ்வில், திமுக வடக்கு மாவட்டச் செய லாளர் கே.கே.செல்லப் பாண்டியன், ஒன்றியக்குழுத்  தலைவர் பாண்டிச்செல்வி போஸ், மாவட்டக் கவுன் சிலர் செல்வம், பேரூராட்சித் தலைவர் ஜெயமீரா, திமுக ஒன்றியச் செயலாளர்கள் வெங்கடாசலம், சண்முகம், சேட், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர் கலைச்செல்வம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.