districts

img

மாற்றுத்திறனாளியின் ஆவின் பால் கொள்முதல் நிலையம்

புதுக்கோட்டை, நவ.10 - கந்தர்வகோட்டையை அடுத்த கொத்தம் பட்டியில் மாற்றுத்திறனாளி பெண் சுகுணா வின் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா அரியாணிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தம்பட்டி கிராமத்தைச் சோர்ந்தவர் பன்னீர் செல்வம் மகள் சுகுணா. மாற்றுத்திறனாளி யான இவர் தசைப்பிடிப்பு நோயால் பாதிக்கப் பட்டிருப்பதால், எந்த வேலையும் செய்ய முடி யாது. நடக்க முடியாது. அதே நேரத்தில் தீவிர புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவராகவும், கவிஞராகவும் உள்ளார். இவரது படைப்புகள் பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளன. இந்நிலையில், தன்னைப் பராமரிக்க தனது பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், தனக்கு சுய தொழில் தொடங்க ஏற்பாடு செய்து தர வேண்டுமெனவும் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து சுகுணாவிற்கு ஆவின் பால் கொள் முதல் நிலையம் அமைக்க எம்.சின்னதுரை எம்எல்ஏ ஏற்பாடு செய்து கொடுத்தார். அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை பால்  கொள்முதல் நிலைய நிகழ்ச்சியில் நடந்தது. இதனை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை திறந்து வைத்தார். ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக், ஆவின் கொள்முதல் நிலைய மேலாளர் செல்வகணபதி, திமுக ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ், ஆவின் விரிவாக்க அலுவலர் மஞ்சுளா, கால்நடை மருத்துவர் பார்த்தி பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சுகுணா நன்றி தெரி வித்தார்.