கரூர், ஜன.30 - கிரஷர் மண், கற்கள் போன்றவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோ ரிக்கை மனு அளிக்கப்பட்டது. சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன், செய லாளர் தேவராஜ், பொருளாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் ஆட்சியரிடம் வழங்கிய மனு வில், “கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் முதல் உலகளா விய போர் சூழல் வரை பல காரணிகளால் கட்டுமான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இத னால் கட்டுமானத் தொழில் மிகவும் பாதிப் படைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெரும்பாலான சிறு, குறு கட்டுமான நிறுவ னங்கள் மற்றும் பொறியாளர்கள் இந்த தொ ழிலை விட்டுவிட்டு மாற்று வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் பல பொறியாளர்கள் பெயரள வில் மட்டுமே தொழில் செய்து கொண்டிருக் கிறார்கள். இந்நிலையில், கரூர் மாவட்ட கிரஷர் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து பலமுறை, நியாயமற்ற முறையில் தன்னிச் சையாக விலையேற்றத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கடந்த ஓராண் டில் மட்டும் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலையை 60 முதல் 90 சத வீதம் வரை உயர்த்திவிட்டனர். இந்த விலை யேற்றம் எங்களுக்கு மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கிரஷர் பொருட்களின் விலையேற்றத்தால், அத னைச் சார்ந்த இதர கட்டுமானப் பொருட்க ளின் விலையும் உயருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிட வேலைகள் மேலும் குறைந்து, கட்டுமான தொழில் நசிவடைந்து விடுமோ என அஞ்சுகிறோம். எனவே கிர ஷர் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.