districts

img

சாலைப் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

பெரம்பலூர், ஜூன் 1 -

    தமிழ்நாடு நெடுஞ் சாலைத் துறை சாலைப் பணி யாளர்கள் சங்க குன்னம் 8ஆவது உட்கோட்ட மாநாடு மே 30 அன்று குன்னம் பழைய வட்டாட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.  

    முன்னதாக குன்னம் நெடுஞ்சாலைத் துறை  உதவிக்கோட்ட பொறியா ளர் அலுவலகம் முன்பு சங்க பெயர்ப்பலகை திறப்பு மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. உட் கோட்ட தலைவர் செ.குண சேகர் தலைமை வகித்தார்.

    மாநிலச் செயலாளர் கு.பழநி சாமி துவக்கி வைத்தார்.  பொருளாளர் மணிவண் ணன் வரவு-செலவு அறிக்கை யும், துணைத் தலைவர் வே. பாலசுப்ரமணியன், இணைச் செயலாளர் க.வெங்கட்ரா மன் ஆகியோர் துவக்க உரையும் ஆற்றினர். மாநி லத் தலைவர் மா.பாலசுப்ர மணியன், துணைத்தலைவர் ச.மகேந்திரன் சிறப்புரை யாற்றினர்.  

   சாலைப் பணியாளர் களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப்  பணியாளர்களில் தொழில் நுட்ப கல்வித் திறன் பெறாத  ஊழியர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்.

   சாலைப் பணியாளர்களில் இறந்தோரின் குடும்ப வாரிசு களுக்கு கருணை அடிப்படையில் பணி நிய மனம் வழங்க வேண்டும். ஊதியத்தில் 10 சதவீத ஆபத்து படி, மற்றும் நிரந்தர பயணப்படி, சீருடை சலவைப் படி வழங்க வேண் டும் உள்ளிட்ட நீண்ட நாட் களாக போராடி வரும் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது.  பொதுச் செயலாளர் ஆ. அம்சராஜ் நிறைவுரை ஆற்றி னார்.