districts

திருவாரூர் புத்தக கண்காட்சி: இலட்சினை வடிவமைப்பு போட்டி

திருவாரூர், ஜன.6 - திருவாரூர் மாவட்டத்தில் 2 ஆவது  புத்தக கண்காட்சி பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 11 வரை நடைபெறவுள்ளது.

இதனையொட்டி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இணையதள இலட்சினை (online logo design)  வடிவமைப்பு போட்டி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  இதில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். நுழைவுக்கட்ட ணம் இல்லை.

வெற்றி பெறுபவருக்கு ரூ.10,000 ரொக்கம் அல்லது காசோ லையாக வழங்கப்படும்.  விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் விவரம் thiruvarurbookfairlogo2024 @gmail.com. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க  கடைசி தேதி: 16.1.2024 மாலை 6 மணிக்குள் அனுப்ப வேண்டும். வெற்றி  பெற்றவர்களுக்கு அஞ்சல் மற்றும் ஒரு கட்செவி அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களின் மூலமும் அறி விக்கப்படும். வடிவமைக்கப்படும் சின்னம், திரு வாரூர் மாவட்டம் மற்றும் புத்தக திரு விழாவினை குறிப்பதாக இருக்க வேண்டும்.

வடிவமைக்கப்படும் சின்ன மானது உயர்தெளிவு திறன் கொண்ட (high resoliution) (600 dpi) JPEG  அல்லது PNG வடிவங்களில் (formats)  சமர்ப்பிக்கப்பட வேண்டும். வடிவமைக் கப்படும் சின்னம் தனித்துவமாகவும். அளவிடக் கூடியதாகவும், பல வண்ணங் களை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.  விண்ணப்பத்தை, பங்கேற்பாளர் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களு டன் முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும்.  முழுமையற்ற விண்ணப்பங்கள் பரிசீல னைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங் கள் திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் காப்புரிமைக்கு உட்பட்டது. வெற்றியா ளர் தேர்வில் திருவாரூர் மாவட்ட நிர்வா கத்தின் முடிவே இறுதியானது என  மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித் துள்ளார்.