கரூர், ஜூலை 31-
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட் சித் துறை ஊழியர்கள் சங்க (சிஐடியு) ஆண்டு பேரவை கூட்டம் தான்தோணிமலை யில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கா.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் கே.வி.கணேசன் வரவேற்றார். சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் துவக்கி வைத்தார். ஈரோடு மாவட்டத் தலை வர் எஸ்.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் வேலை அறிக்கையை முன்வைத்து பேசி னார். மாவட்ட பொருளாளர் ப.சரவணன் வரவு- செலவு அறிக்கையை முன்வைத்து பேசினார். மாவட்ட துணை செயலாளர் எ.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
கூட்டத்தில், மாவட்டத் தலைவர் எம்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் சி. முருகேசன், மாவட்டப் பொருளாளர் கே.வி. கணேசன் உள்ளிட்ட 13 பேர் கொண்ட மாவட்ட நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டனர்.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், சட்டப்படியான சலுகைகளை அமல்படுத்திட வேண்டும். உள்ளாட்சிப் பணிகளை அவுட்சோர்சிங், ஒப்பந்த முறைக்கு மாற்றுவதை கைவிட வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் நிர்ணயித்துள்ள தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு ரூ.610, தூய் மைப்பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ரூபாய் 669 ஊதி யம் வழங்கிட வேண்டும், காப்பீட்டு தொகை செலுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.