சம்பா நெல்லில் பூச்சித் தாக்குதல்
வேதாரண்யம், டிச.24 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வட மழை, மணக்காடு, ஆயக்காரன்புலம், பஞ்சநதிகுளம், தென் னடார், தகட்டூர், மருதூர், வாய்மேடு, கருப்பம்புலம் உள்ளிட்ட 25 கிராமங்களில் சுமார் 10,000 ஹெக்டரில் சம்பா நெல் சாகு படி நடைபெற்று வருகிறது. வடகிழக்குப் பருவமழையில் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த சம்பா நெல்லில், தற்போது குருத்துப்பூச்சி, தோகை பூச்சி தாக்குதல் பெருமளவு காணப்படுகிறது. விவசாயிகள் பல முறை பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தாலும், இந்தப் பூச்சிகள் அழிவதில்லை. தொடர்ந்து பூச்சித் தாக்குதல் அதி கரிக்கிறது. பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் விவ சாயிகள் தவிக்கின்றனர். இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என்றும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டும் எனவும் விவசாயி கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய இருவர் ஆற்றில் சடலமாக மீட்பு
அரியலூர், டிச.24 - துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிய இரண்டு பேர் கொள்ளிடம் ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தா. பழூர் அண்ணக்காரன்பேட்டை கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்த குலோத்துங்கன் (55) மற்றும் கீழத்தெருவைச் சேர்ந்த இளஞ்சேரன் (எ) இளங்கோவன் (65). இவர்கள் இருவரும் உறவினர்கள். இவர்கள் மற்றும் சிலர், தஞ்சாவூர் மாவட்டம் வாண்டா யிருப்பு பகுதியில் உறவினர் தியாகராஜன் என்பவரின் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, அண்ணாகாரன்பேட்டை திரும்புவ தற்காக, கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குறுக்கே நடந்து சென்றுள்ளனர். ஆற்றில் நீர் வரத்து அதிகம் இருந்ததால், எதிர்பாராத விதமாக குலோத்துங்கன், இளஞ்சேரன் ஆகியோர் நீரில் மூழ்கினர். அவர்களுடன் வந்த சிலர், இருவரையும் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர், இதுகுறித்து தா.பழூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் தா. பழூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஞாயிறன்று கொள்ளிடம் ஆற்றங்கரை யில் இருவரது சடலங்களும் மிதந்த நிலையில் மீட்கப்பட்டது. இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியார் நினைவு தினம்: மாலை அணிவித்து மரியாதை
தஞ்சாவூர், டிச.24 - பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியாரின் 50 ஆவது ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப் பட்டது. தஞ்சாவூரில் பெரியார் சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். தஞ்சாவூர் அருகே வல்லம், பெரியார் மணியம்மை அறி வியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் வல்லத்தில் உள்ள பெரியார் உருவச் சிலைக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.செ. வேலுசாமி தலைமையில், பல்கலைக் கழக பதிவாளர் பி.கே. ஸ்ரீவித்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அரியலூர் அரியலூர் ரெட்டி ஏரிக்கரையிலுள்ள பெரியார் சிலைக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செந்துறை யிலுள்ள பெரியார் சிலைக்கு போக்குவரத்துத் துறை அமைச் சர் சா.சி.சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். இதேபோல் ஜெயங்கொண்டம், திருமானூர், கீழப்பழு வூர், தா.பழூர், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளி லுள்ள பெரியார் சிலைகளுக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
தஞ்சாவூர், டிச.24- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எம்.எஸ் விழா அரங்கில் ஏசிஇ டிரஸ்ட் சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சாத னையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவரும், ஓய்வுபெற்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளருமான வி.மகேந்தி ரன் தலைமை வகித்தார். அறக்கட்டளை பொருளாளர் இ.வீ. காந்தி வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில், காவல்துறை தலைவர் ஓய்வு கே.பெரி யய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 10 ,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் நீட் தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், மாநில அள வில் உயர்கல்வியில் தங்கப்பதக்கம், விளையாட்டு மற்றும் இதர துறைகளின் சாதனையாளர்களுக்கு ரூ.4 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கிப் பாராட்டிப் பேசினார். அறக்கட்டளை செயலாளர் என்.இளங்கோ, இணைச் செயலாளர் சி.விஜய்காந்தன் மற்றும் நிர்வாகிகள், பொது மக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் பி.ராமமூர்த்தி நன்றி கூறினார்.
மக்களுடன் முதல்வர் முகாம்
பாபநாசம், டிச.24 - தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. பொது மக்களி டமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றன. முகாமில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச்செல்வன், பேரூராட்சித் தலைவி இலக்கியா, திமுக அம்மாப் பேட்டை வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ், பேரூர் செயலர் சீனு, பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஹஜ் பயணம் மேற்கொள்வோர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்
திருச்சிராப்பள்ளி, டிச.24 - திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த ஹஜ் பயணம் மேற்கொள்வோர் பாஸ்போர்ட் டுக்கு விண்ணப்பிக்க சிறப்பு வசதி செய்யப் பட்டுள்ளது என மண்டல பாஸ்போர்ட் அலு வலர் பி.பானுமதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த, ஹஜ் பயணம் (2024) மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் பாஸ்போர்ட் பெற, தில்லை நகர் 7 ஆவது குறுக்குத் தெரு வில் அமைந்துள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் சிறப்பு கவுண்டர் அமைக் கப்பட்டுள்ளது. கணினி மூலம் அச்சிடப்பட்ட பாஸ்போர்ட் உள்ளவர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற் கொள்ள முடியும். கைகளால் எழுதப்பட்டு உள்ள பாஸ்போர்ட் மற்றும் காலாவதி யாக ஓர் ஆண்டு பாக்கியுள்ள பாஸ்போர்ட் களால் பயணம் மேற்கொள்ள முடியாது. புதி தாக பாஸ்போர்ட் எடுக்க வேண்டும். எனவே புதிதாக பாஸ்போர்ட் எடுப்போர் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் சிறப்பு திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்போர், வழக்கம்போல இணைய வழியில் விண் ணப்பித்து, உரிய அனுமதிச்சீட்டு மற்றும் விண்ணப்ப நகல்கள் (ஏஆர்என் தாள்) உள்ளிட் டவற்றுடன் இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டரில் ஒப்படைக்க வேண்டும். மேலும் ஹஜ் பயணிகள் பாஸ்போர்ட் எடுப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து பாஸ்போர்ட் பெற்றுத் தர வழி வகை செய்யப்படும். இது தொடர்பான விவரங்களுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவ லகத்தை நேரிலோ அல்லது கைப்பேசி எண் (வாட்ஸ் அப்): 7598507203 மற்றும் இலவச தொடர்பு எண்.1800 258 1800 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்.
முதியவர்களுக்கு லிப்ட் வசதி செய்ய நிதி இல்லை
சுவாமிமலை கோயில் நிர்வாகம் தகவல்
கும்பகோணம், டிச.24- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான (நான்காம் படைவீடு) சுவாமிநாத சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு தினமும் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் உச்சியில் உள்ள முருகன் சன்னதியை நேரில் காண 60 படிகளை தாண்டி செல்ல வேண்டும். வயதான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் படியேற முடியாமல் தவித்தனர். இந்நிலையில் அனைத்துத் துறை ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு சார்பில் அண்மையில், கும்பகோணம் தனியார் பள்ளியில் நடந்த கூட்டத்தில், ‘சுவாமிமலை முருகன் கோயிலுக்கு முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சென்று வழிபட லிப்ட் வசதி செய்து தர வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இது தொடர்பாக அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், சம்பந்தப்பட்ட சுவாமிமலை கோயில் அறநிலையத்துறை நிர்வாகத்தை சந்தித்து, லிப்ட் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும், அதற்கான பணிகள் நடக்கிறதா என்றும் கேட்டுள்ளனர். இதற்கு, “அதற்கான அளவீடுகள் மற்றும் கட்டமைப்பு செலவுத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோயில் நிர்வாகத்தில், நிதி இல்லாததால் தற்போது லிப்ட் பணியை மேற்கொள்ள முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.
கிறிஸ்துமஸ் தினத்தில் மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்
மாளிக்க டிசம்பர் 25 அன்று மதுரை வழியாக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஒரு வழி சிறப்பு ரயில் (06046) நாகர்கோவி லில் இருந்து டிசம்பர்- 25 அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு சென்னை சென்று சேரும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயிலுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
தில்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் இயங்கும்
மதுரை, டிச.24- பராமரிப்பு பணிகளுக்காக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டி ருந்த கன்னியாகுமரி - தில்லி நிஜாமுதீன் - கன்னியா குமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும். ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 பிப்ரவரி 2 ஆகிய நாட்க ளில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - தில்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் (12641) மற்றும் மறுமார்க்கத்தில் ஜனவரி 13, 15, 20, 22, 27, 29, பிப்ரவரி 3, 5 ஆகிய நாட்களில் தில்லியில் இருந்து புறப்பட வேண்டிய தில்லி நிஜாமுதீன் - கன்னியா குமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் (12642) ஆகியவை வழக்கம்போல் இயங்கும். இந்த ரயில்கள், வடக்கு ரயில்வே ஆக்ரா கோட்டத்தில் உள்ள மதுரா ரயில் நிலையம் மற்றும் மதுரா - பல்வால் ரயில் நிலைய பிரிவில் ரயில் பாதை மற்றும் சைகை (Signal) மேம்பாட்டு பணிகளுக்காக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ஏற்க னவே அறிவிக்கப்பட்டிருந்தது.
800 பயணிகளை காப்பாற்றிய தண்டவாள பராமரிப்பாளருக்கு கோட்டப் பொறியாளர் பாராட்டு
தூத்துக்குடி , டிச. 24 தூத்துக்குடி மாவட்டத் தில் கடந்த 6 தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் பாதிக் கப்பட்டன. குறிப்பாக ஸ்ரீவை குண்டம், ஏரல் பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் பாதிக்கப்பட்டன. அந்த சமயத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூரில் இருந்து 800க்கும் மேற்பட்ட பயணி களுடன் இரவு 8.30 மணி அள வில் ஸ்ரீவைகுண்டம் வந்தது. அந்த சமயத்தில் ஸ்ரீவை குண்டம் அடுத்த தாதன் குளம் தண்டவாளத்தில் ஏற் பட்ட சேதத்தால் ரயில் தற் காலிகமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப் பட்டது. அதை தொடர்ந்து மூன்று தினங்கள் அந்த ரயிலில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் ரயில் தண்டாவளத்தில் ஏற்பட்ட சேதத்தை சரியான நேரத் தில் பார்த்து பொறியாள ருக்கு தகவல் தெரிவித்து 800 பயணிகளின் உயிரை காப்பாற் றிய தண்டவாள பராமரிப்பா ளர் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த செல்வகுமாருக்கு மதுரை கோட்டப் பொறி யாளர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ஆய்வுக்காக வந்தபோது நேரில் பாராட்டு தெரிவித்தார். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயி லில் வந்த 800 பயணிகளின் உயிரையும் காப்பாற்ற உத வியாக இருந்த ஸ்ரீவைகுண் டம் ஸ்டேசன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு ரூ. 5000 ரொக்கத் தொகையும், தண்டவாள பராமரிப்பாளர் செல்வகுமா ருக்கு 5000 ரூபாயும் இவர்கள் உள்பட 12 பேருக்கு மொத்தம் 40000 ரூபாய் என இவர்களை பாராட்டும் விதமாக ரயில்வே துறை அறிவிப்பு வெளியானது. விரைவில் இவர்களுக்கான உதவித்தொகை ரயில்வே துறை சார்பில் வழங்கப்பட உள்ளது.
சீர்மிகு நகரத் திட்டம் என்ற பெயரில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்த எதிர்ப்பு
தஞ்சாவூர், டிச.24 - நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் பி.எம். காதர் உசேன் தலைமையில் நடைபெற்றது. எதிர்காலத் திட்டங்கள், பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர் என். குருசாமி பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயினுலாபுதீன், மாவட்ட பொருளாளர் ஹெச்.அப்துல் நசீர், மாவட்ட துணைத் தலைவர் பி.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், “சீர்மிகு நகரம் என்ற பெயரிலும், நீர்நிலை புறம்போக்கில் இருப்பதாகச் சொல்லியும், பல தலைமுறைகளாக மாநகரில் குடியிருக்கும் மக்களின் வீடுகளை இடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்கி, வீடு கட்டித் தர வேண்டும். சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் கீழவாசல் பகுதி வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதை உடனடியாக சீர் செய்ய வேண்டும். மதச்சார்பின்மையை காக்கவும், மக்கள் ஒற்றுமையை காக்கவும் இயக்கங்கள் நடத்துவது” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.