அறந்தாங்கி, ஜூன் 6-
மல்யுத்தவீரர்களை பாலியல் ரீதியாக கொடுமை படுத்திய இந்திய மல்யுத்த அமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூசன் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மல்யுத்தவீரர்கள் போராட்டத்தில் காவல்துறை நடத்திய அராஜகத்திற்கு எதிராகவும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்ஜசி அலுவலகம் முன்பு காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளைத் தலைவர் வீரப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காப் பீட்டு கழக ஊழியர் சங்கம், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம், முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தினர் திரளாகக் கலந்து கொண்டனர்.