districts

img

தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தின பேரவை

திருவாரூர்/மயிலாடுதுறை, டிச.16 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவா ரூர் மாவட்டக் குழு சார்பில் விடுதலைப் போராட்ட வீரர் தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தின  நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.  இதில் தோழர் பி.ராமமூர்த்தி உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி தலைமை வகித்து துவக்க உரை யாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், பி.ஆர். வாழ்க்கை வரலாற்றை நினைவு  கூர்ந்து சிறப்புரையாற்றினார். திருத்துறைப் பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ் வரவேற்றார். நகரக்குழு உறுப்பி னர் எம்.கோபு நன்றி கூறினார்.  நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், வர்க்க வெகுஜன அரங்கத்தினர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தின பேரவை  கூட்டம், கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு  அலுவலகத்தில் நடைபெற்றது. மயிலாடு துறை ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவிச்சந்தி ரன், மயிலாடுதுறை நகரச் செயலாளர் டி.துரைக் கண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.மேகநாதன், ஆர்.ரவீந்திரன், ஏ.ஆர்.விஜய் ஆகியோர் உரை யாற்றினர். தோழர் பி.ராமமூர்த்தி உருவப்படத் திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.