districts

img

கேஸ் விலையை உயர்த்தியதுதான் மோடி அரசின் சாதனை

திருவாரூரில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்

திருவாரூரில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் திருவாரூர், ஏப்.6-  திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜூவுக்கு கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு, திருவாரூர் மாவட்டம் தெற்கு வீதியில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், “கடந்த 10 ஆண்டுக்கு முன்பு சமையல் எரிவாயு விலை ரூ.410 ஆக இருந்தது. தற்போது ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்று. எனவேதான் நமது தேர்தல் அறிக்கையில் கேஸ் விலை ரூ.500, டீசல் விலை ரூ.65, பெட்ரோல் விலை ரூ.75 என குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்தமிழ் அறிஞர் கலைஞர், ‘நான் பெரியாரையோ, அண்ணாவையோ சந்திக்கவில்லை என்றால், கம்யூனிஸ்ட் ஆக செயல்பட்டுக் கொண்டிருப்பேன்’ என பல கூட்டங்களில் சொல்வார். அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராஜுவுக்கு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2.11 லட்சத்திற்கு மேல் வாக்களித்து வெற்றியை தந்தீர்கள்.  இந்த தேர்தலிலும், இந்திய கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜுவுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்” என்றார்.  இக்கூட்டத்தில் நாகை நாடாளுமன்ற பணிக் குழு தலைவரும், திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கே.கலைவாணன், அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

அடிமைகளையும், அடிமைகளின் எஜமானர்களையும் விரட்டுவோம்!
மயிலாடுதுறை பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி சூளுரை

மயிலாடுதுறை, ஏப்.6 - மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதா வுக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்குக் கேட்டு அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். வெள்ளியன்று இரவு மயிலாடு துறை சின்னக் கடை வீதியில் நடந்த பிரச்சாரத்தில், பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.  அப்போது அமைச்சர் உதயநிதி பேசுகையில், “இந்த தேர்தலில் அடிமைகளையும், அடிமைகளின் எஜமானர்களையும் ஓட ஓட விரட்ட வேண்டும். மழை, வெள்ளம்  வந்து 6 மாவட்டங்கள் தவித்த போதும், நீட் தேர்வால் மாண வர்கள் தற்கொலை செய்து கொண்ட போதும் ஆறுதல் சொல்லக்கூட வராத பிரதமர், புயல்கள் வரும் போதெல்லாம் வராத பிரதமர் மோடி, தேர்தல்  நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டை யேச் சுற்றிக் கொண்டிருக்கிறார். பள்ளிக் குழந்தைகள் “பேன்ஸி  ட்ரஸ்” போட்டியில் கலந்து கொள் வது போல வேட்டி அணிந்துக் கொண்டு, தனக்கு வராத திருக் குறளை, யாருக்குமே புரியாத அளவிற்கு சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வருகிறார். நாம் செலுத்தும் வரியை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வாரி வழங்கிவிட்டு, பாஜக ஆளாத மாநி லங்களை வஞ்சிக்கிறார். மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே ஓடிய ரயில் சேவையை,  காரைக்கால் வரை நீட்டித்து மீண்டும் இயக்கப்படும். மயிலாடு துறைக்கு ரிங் சாலை அமைக்கப் படும். மாப்படுகை, நீடூர் பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக் கப்படும்” என வாக்குறுதியளித் தார்.  அமைச்சர் சிவ.வீ.மெய்யநா தன், எம்.பி., செ.இராமலிங்கம், திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்எல்ஏவுமான நிவேதா எம்.முருகன், சீர்காழி எம்எல்ஏ எம். பன்னீர்செல்வம், காங்கிரஸ் மாவட்டத் தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப் பினருமான எஸ்.ராஜகுமார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் உட்பட இந்தியா கூட்டணி கட்சியினர், தொண்டர் கள் கலந்து கொண்டனர்.

எதிரிகள் பிரிந்து நின்று நம்மை எதிர்க்கின்றனர்

நாகையில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்

நாகப்பட்டினம், ஏப்.6- நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜூவுக்கு, கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குகளை கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள அவுரித் திடலில் நடந்த பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இந்த தேர்தலில் எதிரிகள் பிரிந்து நின்று நம்மை எதிர்க்கின்றனர். அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். 40 தொகுதிகளையும் நாமே கைப்பற்றி, மோடியை விரட்ட வேண்டும். தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், உங்களின் (நாகை மக்கள்) உற்சாக வரவேற்பு இருக்கிறது. எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிற வை.செல்வராஜூவுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார். இந்தச் சுற்றுப் பயணத்தில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, திமுக மாவட்டச் செயலாளர் என்.கௌதமன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.