districts

img

வெண்மணி வரலாற்றை பேசுவோம் நிகழ்ச்சி: மயிலாடுதுறையில் 100 இடங்களில் நடந்தது

மயிலாடுதுறை, டிச.24 - ‘வெண்மணியின் வரலாற்றை பேசு வோம்; செங்கொடி தியாகத்தை போற்றுவோம்’ என்ற தலைப்பில் மயி லாடுதுறை மாவட்டத்தில் நூறு மையங்களில் கருத்தரங்கு, தெரு முனைக் கூட்டம் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை டிசம்பர் மாத இறுதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பல்வேறு இடங்களில் ஒவ்வொரு நாளும் இந்நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரு கின்றன. தரங்கம்பாடி ஒன்றியம், திரு மெய்ஞானம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பில்  சிறுவர்கள், பெண்கள், இளைஞர் களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்தி ரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. சிம்சன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஜி.கலைச்செல்வி, அம்மையப் பன், மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றியச் செயலாளருமான டி.கோவிந் தசாமி, கிளைச் செயலாளர் ஜெயப் பிரகாஷ் ஆகியோர், வெண்மணி குறித்து உரையாற்றி போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி னர். மயிலாடுதுறை ஒன்றியம், கழுக் காணிமுட்டம் கிராமத்தில் பாலர் அரங்கம், மாதர் சங்கம்,

அகில இந்திய  விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து ஒவிய போட்டி, பாட்டு போட்டி, விளையாட்டு போட்டிகளை நடத்தின.  பாலர் சங்க கிளைத் தலைவர் ஜி.எஸ்.அஜய் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவிச்சந்திரன், பாலர் சங்க அமைப்பாளர் த.ராயர், மாதர் சங்க ஒன்றியத் தலைவர் உஷாராணி ஆகியோர் உரையாற்றினர். சோழம்பேட்டை கிராமத்தில் ஒன்றி யச் செயலாளர் டி.ஜி.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங் கில், மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் உரையாற்றினர். செம்பனார் கோவில் ஒன்றியம், ஆக்கூரில் ஒன்றி யச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலை மையில் தெருமுனைக் கூட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.துரைராஜ், மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உரை யாற்றினர்.  ஆக்கூரிலுள்ள தனியார் பள்ளி யில், மாணவர், வாலிபர், மாதர் சங்கங் கள் சார்பில் கருத்தரங்கும், சிறுவர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எஸ்.துரை ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி. கலைச்செல்வி, கண்ணகி, வீ.எம்.சர வணன் ஆகியோர் சிறப்புரையாற்றி, போட்டிகளில் வென்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கினர்.