‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம்! மாற்றுத்திறனாளிகள் சங்கம் உறுதி
கும்பகோணம், ஏப்.8- மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் சட்டமன்றத் தொகுதிகளில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் கர்ணக்கொல்லை கீழத்தெருவில் நடந்த கூட்டத்திற்கு சங்க பொறுப்பாளர் பாரூக் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கணேசன் சிறப்புரை யாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் பழ.அன்புமணி, மயி லாடுதுறை மாவட்டச் செயலாளர் புருசோத்தமன், தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் ஜி.சரவணன், கும்பகோணம், பாபநாசம் ஒன்றிய பொறுப்பாளர்கள் உரையாற்றினர். மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் பொது மக்களை சந்தித்து, தேர்தல் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி, இந்தியா கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவிற்கு கைச் சின்னத் தில் வாக்குச் சேகரிக்க உறுதி ஏற்றனர்.
ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட மேற்கூரை இடிந்து விபத்து
அறந்தாங்கி, ஏப்.8 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மேலப் பட்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் 1994 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 30 ஆண்டுகளை கடந்த இந்தக் கட்டிடம், மிகவும் பழுதடைந்து இருப்ப தாக, சம்பந்தப்பட்ட பிடிஓ மற்றும் மாவட்ட ஆசிரியரி டம் ஊராட்சி மன்றத் தலைவர் நேரடியாக மனுக்கள் அளித்தார். ஆனால் இதில் எந்தப் பயனும் இல்லை. திங்களன்று (ஏப்.8) வழக்கம் போல் ஊராட்சி மன்றத் தலைவர் அயூப்கான் அலுவலகத்தில் பணியில் இருந்த போது, திடீரென மேற்கூரை பெயர்ந்து விழுந் தது. இந்த விபத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் அயூப்கான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தில், அலுவலகத்தில் இருந்த நாற்காலி கள் மற்றும் கணினி சார்ந்த பொருட்கள் சேதமடைந்தன.
கோடை உழவு செய்வதால் ஏற்படும் நன்மைகள்: வேளாண் துறை விளக்கம்
தஞ்சாவூர், ஏப்.8- நிலத்தில் கோடை உழவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஏ.அப்சரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கோடை உழவு என்பது வெப்பமான கோடையில், ஆழமாக உழுது மண்ணை கிருமி நீக்கம் செய்தல் ஆகும். கோடை உழவு செய்வதால் கடினமான மேலடுக்கு உடைந்து மண்ணின் ஊடுருவல் திறன் அதிகரித்து மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது. இதன் விளைவாக தாவர வேர்கள் எளிதாக அதிக ஈரப்பதத்தை பெறுகின்றன. மேலும் மண்ணின் கட்டமைப்பு, காற்றோட்டத்தை மேம்படுத்துகிறது. இது நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கு உதவுகிறது. இதன் விளைவாக தாவரங்களுக்கு அதிக ஊட்டச்சத்துகள் கிடைக்கும். மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் அதிகரித்த காற்றோட்டம் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மற்றும் முந்தைய பயிர்களின் வேர்கள் மற்றும் களைகள் போன்றவை மூலம் வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சிதைவதற்கு உதவுகிறது. மழை நீரை உறிஞ்சும் திறன் அதிகரிக்கிறது. பல பூச்சிகள் வெப்பமான கோடை காலத்தில் மண்ணின் அடியில் உறங்கும். கோடை உழவு செய்யும்போது மண்ணை கவிழ்ப்பதால் சூரியனின் கூர்மையான கதிர்கள் மண்ணிற்குள் நுழைந்து, மண்ணில் பரவும் பூச்சிகள், முட்டைகள், புழுக்கள், கூட்டுப் புழுக்கள் மற்றும் நோய் உண்டாக்கும் கிருமிகளை கொன்று விடும். இதனால் அடுத்தடுத்த பயிர்களில் பூச்சிகளின் ஆபத்துகள் குறைகிறது. இதன் விளைவாக பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு மற்றும் பூச்சிக்கொல்லிகளை வாங்குவதில் விவசாயிகளின் செலவு குறைகிறது. களைச்செடிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகள் கோடை உழவு செய்து அடுத்தடுத்த பருவங்களில் பூச்சிகள், நோய்கள் மற்றும் களைகளின் பாதிப்புகளில் இருந்து பயிரை காத்து அதிக மகசூல் பெற்றிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.