districts

img

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு

திருவாரூர், மார்ச் 30 -  இந்தியா கூட்டணி நன்னிலம் சட்டமன்றத்  தொகுதி செயல்வீரர்கள் கூட்டம், திருவா ரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள புதுக்குடியில் வெள்ளிக்கிழமை மாலை நடை பெற்றது. செயல்வீரர்கள் கூட்டத்திற்கு திமுக வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் வீ.அன் பரசன் தலைமை வகித்தார். குடவாசல் ஒன்றி யச் செயலாளர் பா.பிரபாகரன், எஸ்.ஜோதி ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நாகை நாடாளுமன்ற தொகுதி தலைவ ரும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே.கலைவாணன், சிபிஐ நாகை  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வ ராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர்  எஸ்.எம்.பி. துரைவேலன், விடுதலை சிறுத் தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ் ஓவியா உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இதில் தலைவர்கள் உரையாற்றுகை யில், “இரண்டாவது சுதந்திரப் போராட்டம் துவங்கியுள்ளது. பாசிச மோடி ஆட்சி தூக்கி  எறியப்பட வேண்டும். ஒன்றியத்தில் யார்  ஆட்சியில் இருக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா  கூட்டணியின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை தொகுதி வேட்பாளர் வை.செல்வராஜை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அனைவரும் களப்பணியாற்ற வேண்டும்” என்றனர். கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் சிபிஐ  வேட்பாளர் வை.செல்வராஜ், பாட்டுப் பாடி  கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார். நிகழ்வில், இந்தியா கூட்டணி கட்சியின்  தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.