districts

img

புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கிளியனூர் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதனன்று நடைபெற்றது. குத்தாலம் ஒன்றியக் குழு தலைவர் கு.மகேந்திரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்  நிவேதா எம்.முருகன், தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதாரத் நிலையத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்து பணியை தொடக்கி வைத்தார்.