districts

img

ஆழ்துளைக் கிணறு அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு பாராட்டு

தென்காசி ,ஜூன் 30

     தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச் சந்திரன் தலைமையில்  வெள்ளி யன்று நடைபெற்றது.

    தென்காசி மாவட்டத்தில் 2023 - 2024 ஆம் ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட நெல் - 2197 ஹெக்டேர்,சிறுதானி யங்கள்- 2831 ஹெக்டேர், பயறு வகைகள் - 275 ஹெக்டேர் பருத்தி - 1073 ஹெக்டேர், கரும்பு - 15 ஹெக்டேர், எண்ணெய் வித்து - 1046 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது.  

     மழையளவு ,நீர் இருப்பு விபரம் மற்றும்இடுபொருட்கள் இருப்பு விபரம் அனைத்து விவ சாயிகளுக்கும் தெரிவிக்கப் பட்டது.

     கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்; வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் ஒரு விவ சாய குடும்பத்துக்கு இரண்டு தென்னங்கன்றுகள் இலவச மாக வழங்கப்பட்டது.தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் இரண்டு பய னாளிகளுக்கு ரூ 91,742- மதிப்பில் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத் தின் கீழ் தரிசு நிலத்  தொகுப்பு களுக்கு ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு அரசாங்கத்தி ற்கு நிலம் வழங்கிய விவசாயி களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரால்  பாராட்டு சான்றி தழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

   மேலும் கடையம் வட்டார வேளாண்மைத் துறையினர் கடையம் மற்றும் ஆலங்குளம் வட்டார தோட்டக்கலைத் துறையினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய கண்காட்சியினை தென்காசி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து பார்வையிட விவ சாயப் பெருமக்களும் திரளா கப் பார்வையிட்டனர்.

   இக்கூட்டத்தில் வேளாண் மை இணை இயக்குநர் தா. தமிழ்மலர், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ச.கனகம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய மற்றும் மாநில திட்டம்) ஊமைத் துரை அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர்கள் அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்கு நர்கள், அனைத்து துறைஅலு வலர்கள், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவ சாயிகள் கலந்து கொண்டனர்.