districts

img

இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்க பள்ளி ஆண்டு விழா

தஞ்சாவூர், செப்.6 -  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள குறிச்சி இந்தியன் வங்கி ஊழியர் சங்க பள்ளி 22 ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  அறக்கட்டளை தலைமை அறங்காவலர் ராஜ.சோமசுந்தரம் தலைமை வகித்தார். அறங்காவலர் சீனி.இளங்கோ வரவேற்றார்.  தமுஎகச மதிப்புறு தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், ஐபிஇஏ பொதுச் செயலாளர் எஸ்.சுனில்குமார், தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். உதவி தலைவர் கே.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தலைமை விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சி.வாசுகி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளித் தாளாளர் ஜி.பாலசுந்தர் நன்றி கூறினார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ப.மீனா, உயர்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ஆர்.தியாகராஜன், பள்ளி மேலாளர் டி.மனோபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.