districts

img

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி பதிவு அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா

கல்யாணசுந்தரம் எம்.பி., திறந்து வைத்தார் கும்பகோணம், செப்.25 - கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி  லிமிடெட் 120 ஆவது ஆண்டு நிறுவன  நாள் விழா மற்றும் 121 ஆவது ஆண்டு துவக்க விழா பதிவு அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடை பெற்றது. கடந்த 119 ஆவது பேரவை கூட்டத் தில் பங்குதாரர்களால் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின்படி நிதியின் பதிவு  அலுவலகம் டாக்டர் பெசன் ரோடு,  கும்பகோணம் என்ற விலாசத்தில்  உள்ள நிதிக்கு சொந்தமான புனர மைக்கப்பட்ட கட்டிடத்திற்கு இடமாற் றம் செய்து திறக்கப்பட்டது. புதிய கட்டிடத்தை மாநிலங்களவை உறுப்பினரும் நிதியின் தலைவரு மான எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி., திறந்து வைத்தார்.  அப்போது அவர் தெரிவிக்கை யில், “வங்கிகள் அதிகம் இல்லாத அன்றைய காலகட்டத்தில் நாடு  சுதந்திரம் பெறுவதற்கு முன்னாள்,  ஏழை மற்றும் நடுத்தர மக்களி டையே சிக்கனம் மற்றும் சேமிப்பு பழக் கத்தினை ஏற்படுத்தவும், அவர்களின் தேவைகளுக்கு எளிதில் கடன் வழங்கி அவர்களது வாழ்க்கையை வளம் பெறச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் 1903  ஆம் ஆண்டு ராவ் பகதூர் என். கிருஷ்ணசாமி ஐயங்கார் மற்றும்  குடந்தையின் முக்கிய பிரமுகர்களால்  தொடங்கப்பட்டு 120 ஆண்டுகளாக சேவையாற்றி, மக்களின் நன் மதிப்பை கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் பெற்றுள்ளது. நிதி நிறுவனத்தின் வரலாற்றில்  இல்லாத அளவில், தமிழகமெங்கும் 119 கிளைகளுடன் செயல்பட்டு வரும் முன்னோடி நிறுவனமாக, இந்திய அளவில் நிதி நிறுவனங்களின் வரி சையில் என்.டி.ஹெச்.4 அந்தஸ்து பெற்ற முதல் நிதி நிறுவனம் இது. இயக்குநர் அவை அவ்வப்போது சிறந்த கொள்கை முடிவுகளை வகுத்து  அதன்படி செயல்பட்டு சிறப்பான நிதி மேலாண்மையால், நகைக்கடன் வணிகத்தில் மிக பாதுகாப்பான நிலையை எட்டியுள்ளது. நாளது தேதியில் டெபாசிட் தொகை  நிலுவை ரூ.3.564 கோடியாக அதி கரித்துள்ளது. அதேபோல் கடன் நிலுவை ரூ.3.436 கோடியாக உள்ளது. இதில் நகைக் கடன் நிலுவை மட்டும்  ரூ.3.393 கோடியாகவும் காப்புப்  பண இருப்பு ரூ.416.37 கோடியாக வும் அதிகரித்துள்ளது. நிதியின் பங்குதாரர்களுக்கு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அதிகபட்சமாக பங்கு ஈவுத் தொகை 25 சதவீதமாக வழங்கப் பட்டுள்ளது. பொது மேலாளர் தலைமை நிதி அதிகாரி தொடங்கி, கடைநிலை ஊழியர்கள் மற்றும் நகை  மதிப்பீட்டாளர்கள் உட்பட மொத்தம் சுமார் 1000 ஊழியர்கள் பணி யாற்றுகின்றனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கி களுக்கு இணையாக மக்களுக்கு சேவை செய்வது, குறைந்த வட்டியில்  நகைக்கடன் வழங்குவது, மக்கள்  நன்மதிப்புடன் வைப்பு நிதி சேகரித் தல், வாடகையின்றி பாதுகாப்பு பெட்டக வசதி போன்றவை இந்நிறு வனத்தின் சிறப்பு அம்சங்கள். நிதி யில் செலுத்தப்படும் அனைத்து முத லீடுகளும் முழு பாதுகாப்போடு உள்ளன. இந்நிறுவனம் மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்கும், சுத்தமான குடிநீர் வழங்குவதற்கும் மருத்துவம் சார்ந்த நலத்திட்டங்களுக்கும் தொகை மற்றும் மருத்துவ உபகர ணங்கள் வழங்கி உதவிபுரிந்து வருகிறது. தற்போது வணிக  சூழ்நிலைக்கேற்ப வாடிக்கையாளர் களுக்கு அளிக்கப்படும் துரித சேவையை கருத்தில்கொண்டு, நிதி யின் வரவு-செலவு நடவடிக்கை களுக்கான புதிய மென்பொருள் உரு வாக்கம் நடைபெற்று வருகிறது. தற்போது 119 கிளைகளுடன் செயல் பட்டு வரும் இந்நிறுவனம் புதிய கிளை களை திறக்க உள்ளது” என்றார். பதிவு அலுவலக இடமாற்ற விழா வில் நிதியின் துணைத் தலைவரும் மயிலாடுதுறை தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான ராம லிங்கம், கும்பகோணம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் நிதியின் இயக்கு நருமான அன்பழகன், நிதியின் மேலாண் இயக்குநர் பிஆர்பி வேலப் பன், இயக்குநர்கள் பிரகாசம், துரைராஜ், அம்பிகா, குரு பிரசாத், மத்திய அலுவலக ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் கலந்து கொண் டனர். மேலாண் இயக்குநர் பிஆர்பி வேலப்பன் நன்றி கூறினார்.