districts

img

எலும்பு முறிவு நோயாளிக்கு 5 நாளாக சிகிச்சை அளிக்கவில்லை

கும்பகோணம், டிச.25- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  அருகே உள்ள பட்டீஸ்வரம், அய்யன் திருவள்ளுவர்  பகுதியில் வசித்து வரு பவர் கரிகாலனின் மனைவி ராஜேஸ் வரி (45). இவர் டிச.20 அன்று வீட்டு  வாசலில் நின்று மழைநீரை அப்புறப் படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த பட்டீஸ்வரம் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றும் கதிர் வேல் என்பவர், தனது இரு சக்கர வாக னத்தில் செல்போன் பேசியபடி ஓட்டி  வந்துள்ளார். இதனால் நிலை தடுமாறிய  அவர், அங்கிருந்த ராஜேஸ்வரி மீது மோதியுள்ளார். இதில் ராஜேஸ்வரியின் கை மற்றும்  காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. அவ ருக்கு பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார  நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட் டது. எலும்பு முறிவு பாதிப்பு அதிகம்  இருப்பதால், உடனடியாக கும்பகோ ணம் அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ராஜேஸ்வரி கும்பகோணம் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்களான நிலையில், அவருக்கு சரி வர சிகிச்சை அளிக்காததால் வலியால்  துடித்துள்ளார். இதனை அறிந்து, அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட எலும்பு முறிவு மருத்துவர் முத்துக் குமார் மற்றும் தலைமை மருத்துவர் பிரபாகரன் ஆகியோரை சந்தித்து உடன டியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால் தலைமை மருத்துவ மனையில் நோயாளியின் வலி, வேத னையை கருத்தில் கொள்ளாமல், கார ணம் கேட்டால், “இவருக்கு முன் ஒரு  பாட்டி இருக்கிறார். அவருக்கு அறுவை  சிகிச்சை முடித்த பின்னர்தான், ராஜேஸ் வரிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும்” என கூறியுள்ளனர். மேலும் அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்து இருப்பு இல்லை என்றும் கூறுகின்றனர். முதல்வரின் விரிவான காப்பீட் டிலும் பிரச்சனைகள் உள்ளதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று பாருங்கள் என்று நோயாளி யையும், அவர்களது உறவினர்களை யும் அலைய விடுகின்றனர். மருத்துவமனை சுகாதாரத்தில் பல  நல்ல திட்டங்களை கொண்டு வரும்  தமிழ்நாடு அரசுக்கு, அவப்பெயர் ஏற்ப டுத்து வகையிலும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கா மல் காலம் தாழ்த்தி வருவதும் வருத்தத் துக்குரியது என அங்குள்ள உள்நோ யாளிகள் பலர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மேல்  அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு காலம் தாழ்த்தாமல் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், நோயாளிகளின் கருத்தாக  உள்ளது. அலட்சியமாக செயல்படும் மருத்துவ அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.