districts

மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை; கும்பகோணம் இ-சேவை மையம் முற்றுகை

கும்பகோணம் அக்டோபர் 4 மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப் பித்து, தொகை கிடைக்காத நூற்றுக்கும் மேற்பட் டோர் கும்பகோணம் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தை முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த செப்.15 அன்று முதல்வர் துவக்கி வைத்தார். விண்ணப்பம் செய்திருந்தவர்களில் பலருக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், ஒரு சிலருக்கு ஆவ ணங்கள் இணைக்கப்படவில்லை என்றும், சிலருக்கு 1 ரூபாய் மட்டும் வங்கிக் கணக்கில் வரவு  வைக்கப்பட்டும் இருந்தது. மேலும் பலருக்கு வங்கிக் கணக்கில் ஆதார், பான் கார்டு இணைக் காதது, வங்கி கணக்கே இல்லாதது என பல கார ணங்களால் தொகை வழங்கப்படாமல் இருந்தது.  இதற்காக கடந்த செப்.17 முதல் அனைத்து  தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ. அலுவ லகத்தில் மேல்முறையீட்டுக்கு தனி உதவி மைய மும், ஆலோசனை மையமும் செயல்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உரிமைத்  தொகைக்காக கும்பகோணம் தாலுகா அலுவ லகம் வந்தனர். காலை 10:30 மணியளவில் இ-சேவை மையம் திறக்கப்பட்ட நிலையில், சர்வர் வேலை செய்யவில்லை என்று கூறிய தால் பெண்கள் இ-சேவை மையத்தை முற்று கையிட்டனர். இதுகுறித்து பெண்கள் தெரிவிக்கையில், ‘பணக்காரர்கள் அக்கவுண்ட்டில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. ஆனால் நாங்கள்  இ-சேவை மையத்தை தொடர்பு கொண்டால், இது சரியில்லை; அது சரியில்லை என்று  அலைக்கழிக்கின்றனர்’ என்றனர் ஆதங்கத் துடன். தொடர்ந்து கோட்டாட்சியர் பூர்ணிமா, வட்டாட் சியர் வெங்கடேஸ்வரன், காவல்துறை ஆய்வா ளர் அழகேசன் ஆகியோர் அங்கு கூடியிருந்த பெண்களை சமாதானப்படுத்தி, தகுதியான அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தனர்.