districts

கும்பகோணம் மாநகராட்சி குடிநீரால் மஞ்சள்காமாலை பாதிப்பு 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

கும்பகோணம் ஆக.24-

     தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி 14-ஆவது வார்டு வண்ணாங் கண்ணியில் மாநகராட்சி விநியோகித்த குடி நீரால்  மூன்று பேர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு  தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்

    கும்பகோணம் மாநகராட்சி 14- ஆவது  வார்டில் ஏராளமான குடும்பங்கள் வசித்து  வருகின்றனர். வண்ணாங்கண்ணி பகுதி யில் வசித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் செயலாளர் கே. செந்தில்குமார் மகன் கார்த்திக் (17), மகள்  காயத்ரி (23) செந்தில்குமாரின் சகோதர ரின் மகள் திவ்யா (15) ஆகிய மூவரும் கடந்த  நான்கு நாட்களாக கடுமையான காய்ச்ச லால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர் கள் மூவரும் மாநகராட்சி குடிநீரைக் குடித்த தால் மஞ்சாள் காமாலையால் பாதிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நோயின் தாக்கம் அதிக ரித்ததால் மூன்று பேரும் தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

      மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் நீலமேகம், ஆர். மனோகரன் ஜெய பால் உள்ளிட்ட  பலர் சந்தித்து பெற்றோர்களி டம் உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தனர். மூன்று பேருக்கும் அளிக்கப்படும் சிகிச்சை கள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்ட றிந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

         இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன் வியாழனன்று விடுத்துள்ள அறிக்கை:-

        மஞ்சள்காமாலையின் தாக்கம் குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரி வித்தனர். மேலும் மாநகராட்சி நிர்வாகம்  அப்பகுதியில் சுகாதாரத்துறை சார்பில்  முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்றவர்களுக்கு மேற்கொண்ட பரி சோதனையில் இரண்டு குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

      குடிநீரால் காய்ச்சலும், மஞ்சாள் காமாலை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. கும்ப கோணம் மாநகராட்சி நிர்வாகம்  சம்மந்  தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குழந்தை களுக்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பான நல்ல குடிநீர் கிடைப்பதற்கான ஏற்பாட்டை யும் மாநகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும்  

      தஞ்சாவூரில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் கார்த்திக் மாணவிகள் திவ்யா, காயத்ரி ஆகியோரின் சிகிச்சைக்கு  தமி ழக அரசு உரிய உதவி செய்ய வேண்டும். இதற்கு அரசும் மாவட்ட நிர்வாகமும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளார்.