அருமனை, அக்.25 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாத காலமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் அடிக்கடி பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. மேகங்கள் சில நேரங்களில் நீல நிறமாகவும் சில நேரங்களில் ரோஸ் நிறமாகவும் காணப்படுகிறது அதோடு மேக மூட்டத்துடனும் பார்ப்பவர்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இயற்கை அழகுடன் காணப்படுகிறது. கடந்த 23-ம் தேதி மாலை 4.30 மணிக்கு பத்துகாணிப்பகுதியில் பக்கத்தில் நிற்பவர்களை பார்க்க முடியாமல் பனிமூட்டமாக காணப்பட்டது. தூரத்தில் நின்று பார்ப்பவர்களுக்கு இந்த எழில்மிகு தோற்றம் மனதை குளிர்ச்சி அடைய செய்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.