districts

img

ஸ்பெயின் உலக இரும்பு மனிதன் போட்டிக்கு குமரி மாவட்ட வீரர் தேர்வு

நாகர்கோவில், செப்.11- உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டி களில் ஸ்ட்ராங் மேன் போட்டிகள் மிகவும் முக்கியத்துவம்  வாய்ந்தது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்களது உடல்  எடையை விட பல மடங்கு எடை கொண்ட பொருட்களை தூக்கி சாதனை படைத்து வருகிறார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்ணன் என்ற எம்.ஏ பட்டதாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள  தாமரை குட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர்  பல்வேறு எடை பிரிவு போட்டிகளில் பங்கேற்று கனரக வாக னங்களை தனது உடலால் இழுத்து மூன்று முறை  ஸ்ட்ராங் மேன் ஆஃப் இந்தியா பட்டம் வென்றுள்ளார்.  கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது 90 கிலோ உடல் எடைக்கு அதிகமான எடை கொண்ட பொருட்களைத் தூக்கி சாதனைகள் படைத்து வருகிறார். இந்நிலையில், முதல் முறையாக இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற உலக இரும்பு மனிதன் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட இவர் 85 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்று இரண்டாம் இடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான உலக அள விலான அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதன் போட்டி, வரும் அக்டோபர் மாதம் 13,14,15 ஆகிய தேதிகளில் ஸ்பெ யினில் நடைபெறுகிறது.  இந்த போட்டியில்  கலந்து கொள்ள கண்ணன் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து,  அண்ணா விளையாட்டு அரங்கில் கடுமையான பயிற்சி யில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக தமிழக அரசிடம் உதவி கள் கேட்டும் கூட அரசு முன் வரவில்லை என வேதனை தெரிவித்தார்.