districts

img

குளித்தலை அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக எப்போது செயல்படும்?

கரூர், டிச.17 - குளித்தலை அரசு மருத்துவ மனையை மாவட்ட அரசு தலைமை  மருத்துவமனையாக செயல் படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் கரூர்  மாவட்டம் குளித்தலை ஒன்றியச்  செயலாளர் இரா.முத்துச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: கரூரில் செயல்பட்டு வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையை தமிழக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம்  உயர்த்தியது. பின்பு, கரூருக்கு அடுத்தபடியாக 2 ஆவது பெரிய நகரமான குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனையை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யாக தரம் உயர்த்தியது கடந்த  அதிமுக அரசு. இதற்கான நடவ டிக்கைகளை எடுத்து குளித்தலை அரசு மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளுக்கும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. கடந்த அதிமுக அரசு

, குளித் தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனை யாக அறிவித்தது. ஆனால் அர சாணை வெளியிடவில்லை. இந்நிலையில், இணையதளத்தில் கூட குளித்தலை தான் மாவட்ட  அரசு தலைமை மருத்துவமனை என பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. 2021 இல் திமுக அரசு  ஆட்சி அமைத்த பின், குளித்தலை யில் மாவட்ட அரசு தலைமை  மருத்துவமனையை செயல்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, குளித்தலை பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் தமிழக முதல்வரிடமும், சுகாதாரத் துறை  அமைச்சர், குளித்தலை சட்டமன்ற  உறுப்பினர் இரா.மாணிக்கம் ஆகி யோரிடமும் கோரிக்கை  வைக்கப் பட்டது.  இதைத் தொடர்ந்து 25.10. 2021-இல் குளித்தலை அரசு மருத்து வமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக அறிவித்து தமிழ்நாடு அரசு அர சாணை வெளியிட்டது. அதன்பிறகு, குளித்தலை அரசு மருத்துவ மனையை, தலைமை மருத்துவ மனையாக செயல்படுத்த எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது கரூர் மாவட்ட அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப் பில், “கரூரில் செயல்பட்டு வந்த  பழைய மாவட்ட தலைமை மருத்து வமனையை மீண்டும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டு உள்ளதாகவும், குளித்தலை அரசு மருத்துவ மனையை மாவட்ட அரசு தலைமை  மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த ரூ.30 கோடி ஒதுக்கி யுள்ளதாகவும்” தெரிவித்தார். ஆனால் தமிழ்நாடு அரசு, குளித்தலை அரசு மருத்துவ மனையை மாவட்ட அரசு தலைமை  மருத்துவமனையாக அறிவித்த அர சாணையை ரத்து செய்துவிட்டு, 10.1.2023 இல் மாவட்ட அரசு மருத்து வமனையை கரூருக்கு மாற்றி அரசாணை வெளியிட்டது. முதலில் வெளியிட்ட அரசா ணைப்படியே, குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம்  உயர்த்தி செயல்படுத்த வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் அனைத்துக் கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப் பட்டன.

 இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர், அனைத்து அரசு அதி காரிகள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோரிடம் பல முறை மனுக்கள் கொடுக்கப்பட்டன. குளித்தலை மக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு  14.11.2023 இல் மாநில அரசு, மீண்டும்  மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையை குளித்தலைக்கு மாற்றி அமைப்பதற்கான சட்டத் திருத்தத்தை (தற்போது நடை முறையில் உள்ள சட்டத்தை மாற்றி  அமைத்தல்) வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு குளித்தலை அரசு மருத்துவமனையை மீண்டும்  மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையாக செயல்படுத்துவதற் கான அரசாணையை உடனடி யாக வெளியிட வேண்டும். மருத்து வமனை நுழைவாயிலில், ‘மாவட்ட  அரசு தலைமை மருத்துவமனை - குளித்தலை’ என பெயர் பலகை வைக்க வேண்டும். இணை இயக்கு நர் அலுவலகத்தை கரூரிலிருந்து குளித்தலைக்கு மாற்ற வேண்டும்.  மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு தேவையான மருத்துவர் கள், செவிலியர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும். குளித்தலை அரசு மருத்துவ மனை, மாவட்ட அரசு தலைமை  மருத்துவமனையாக செயல்படு வதற்கு போதிய நிதியை ஒதுக்க வேண்டும். புதிய கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகளை துவக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.