மயிலாடுதுறை, பிப்.14- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியையும், மயிலாடு துறை மாவட்ட சாரணிய பயிற்சி ஆணைய ருமான ஆர்.ஜி.கலைமதி அண்மையில் கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆளுநர் விருதுக்கான தேர்வு முகாமின் தலைவியாக செயல்பட்டு மாணவிகளுக்கு பயிற்சி அளித்து தேர்வு செய்தார். கும்பகோணம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 450 பேர் கலந்துகொண்ட முகாமில் திறம்பட செயல்பட்ட ஆசிரியை கலை மதியை ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மதிவா ணன், நக்கம்பாடி ஊராட்சி மன்றத் தலை வர் வெண்ணிலா ராஜ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது இக்பால், துணைத் தலைவர் ராமதாஸ் உள்ளிட் டோர் பாராட்டினர்.