districts

img

கண் தானம் செய்த குடும்பத்திற்கு பாராட்டு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா கீழப்பெருமழை கிராமத்தில் வசிப்பவர் புகழ்பெற்ற சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கீழை கதிர்வேல். இவரது தாயார் ஆனந்தவள்ளி அம்மையார் பிப். 2 அன்று இரவு காலமானார். அவரது கண்களை குடும்பத்தினர், ராய் டிரஸ்ட் இன்டர்நேசனல் மூலம் தானமாக வழங்கினர். அப்போது ராய் டிரஸ்ட் இன்டர்நேசனல் நிறுவனத் தலைவர் துரை ராயப்பன், கண் தான ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சிவா, மருத்துவ அணித் தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கண்தானம் செய்த கீழை கதிர்வேல் குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.