புதுக்கோட்டை, ஏப்.20-
குடும்பநலத் திட்டத்தில் சிறப்பாக பணி யாற்றிய மருத்துவர்களுக்கு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங் களை வழங்கிப் பாராட்டினார்.
குடும்பநலத் திட்டத்தின்கீழ், ஆண் மற்றும் பெண் குடும்பநல அறுவை சிகிச் சைகள், அறுவை சிகிச்சையில் மயக்குநர் பணி உள்ளிட்ட பணிகளை சிறப்புடன் செய லாற்றிய முதுநிலை உதவி மருத்துவர், இணை பேராசிரியர், செவிலியர், உதவி மருத்துவர், உதவி பேராசிரியர் உள்ளிட் டோரை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங் களை வழங்கினார்.
இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) மரு.ராமு, துணை இயக்குநர் (குடும்பநலம்) மரு.கோமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.