தஞ்சாவூர், செப்.6- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மாண வர்கள் கராத்தே போட்டி யில் வெற்றி பெற்றனர். புதுக்கோட்டை மாவட் டம் கொத்தமங்கலத்தில் நடைபெற்ற, மாநில அளவி லான முதல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக் கப்பள்ளி மாணவர்கள் மு. அபிஜித் மற்றும் நீ.நித்திய சீலன் ஆகியோர் பங்கேற்ற னர். இவர்கள் கட்டா பிரிவில் முதல் பரிசையும், ரா.ஆதித்யா -ஜெ.நஜுபுதீன் ஆகியோர் 2வது பரிசையும், குமிட் பிரி வில் ரா.ஆதித்யா, நீ.நித்திய சீலன், ஜெ.நஜுபுதீன் ஆகி யோர் 3 ஆம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி யளித்த தலைமை பயிற்சி யாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை பயிற்சியாளர் சந்துரு ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) செ.ராக வன்துரை பாராட்டினார்.