districts

அறநிலையத்துறை அனுமதி பெற்று தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை

அரியலூர், மார்ச் 5 - அரியலூர் மாவட்டம் தா.பழூ ரில் ஸ்ரீவிசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் சிவன் கோவில் உள்ளது. இதன் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 22 ஏக்கர் பரப்பள வில் நிலம் உள்ளது.  தா.பழூர் ஆதிதிராவிடர்கள் காலனி தெருவைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அனை வரும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் நெருக்கடியில் வசித்து வரு கின்றனர். இதில் நூற்றுக்கும் மேற் பட்ட குடும்பத்தினருக்கு வீடுகள்  இல்லை. இந்நிலையில், அறநிலை யத்துறைக்கு சொந்தமான 22 ஏக்கர்  நிலத்தை, இலவச வீட்டு மனைப்  பட்டாவாக வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் கோரிக்கை  வைத்தும் நிறைவேற்றப்பட வில்லை. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் அறநிலையத் துறை  கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், கொட்டகை அமைத்து சமைத்து சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த உடையார்பாளை யம் கோட்டாட்சியர் ஷீஜா, ஜெயங் கொண்டம் வட்டாட்சியர் கலிலூர் ரகுமான் ஆகியோர், இதுகுறித்து திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என கூறி யதன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனையொட்டி திங்கள்கிழமை  மாலை உடையார்பாளையம் வரு வாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கோட்டாட்சியர் ஷீஜா தலை மையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் அறநிலையத் துறை உதவி ஆணையர் நாகராஜ், அறநிலையத் துறை தாசில்தார் கலைவாணன், ஆதி திராவிட நலத்துறை ஆனந்தவேல், தாசில் தார் கலிலூர் ரஹ்மான், ஜெயங் கொண்டம் டிஎஸ்பி ராமச்சந்திரன், அறநிலையத்துறை செயல் அலு வலர் முரளிதரன், தா.பழூர் காவல்  ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் ஆகி யோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில், “வீட்டு மனைப் பட்டா அல்லது அடி மனை ரசீது வழங்குவது தொடர் பாக அரசுக்கு ஆதிதிராவிட நலத் துறை மூலம் நில கையகம் செய்ய நில மதிப்பு நிர்ணயம் செய்து கருத்து அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், இந்து சமய அற நிலையத் துறையின் அனுமதி பெற்று தகுதியான நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அரசிடம் இருந்து உத்தரவு வரும்  வரை மேற்படி இடத்தில் (புலத்தில்)  தற்போது என்ன நிலை உள்ளதோ,  அதேநிலை தொடர்ந்து இருக்க  வேண்டும்” என வருவாய் கோட்டாட் சியர் ஷீஜா தெரிவித்துள்ளார்.  இந்த பேச்சுவார்த்தை கூட்ட நட வடிக்கை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயலாளர் இளங்கோ வன், விசிக கிழக்கு மாவட்டச் செய லாளர் கதிர்வளவன், ஜெயங்கொண் டம் சட்டமன்ற தொகுதி பொறுப்பா ளர் இலக்கியதாசன், சிபிஎம்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஆர்.மணிவேல், எம்.வெங்கடா ஜலம், டி.அம்பிகா, மாவட்டக் குழு உறுப்பினர் அருண்பாண்டியன், செந்தில்வேல், ஒன்றியச் செயலா ளர் ராதாகிருஷ்ணன், ஆண்டிமடம் வட்ட செயலாளர் பரமசிவம், ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் கே.பன்னீர்செல்வம், டி.செல்வ ராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி  மாவட்டப் பொறுப்பாளர்கள் பாலா, குணசேகரன், தமிழ்மணி, ஒன்றிய பொறுப்பாளர் செங்குட்டு வன், நகரச் செயலாளர் செல்வம், ஒன்றிய பொறுப்பாளர்கள் கனக ராஜ், பாக்கியராஜ், அழகர், மதியழ கன், கோவிந்தராஜ் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.