தஞ்சாவூர், பிப்.29 - மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் இளவரசன் (45).இவர் பிப்ரவரி 26 ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு செவ்வாய்க் கிழமை மூளைச் சாவு ஏற் பட்டது. இவரது உடல் உறுப் புகளை தானம் செய்ய உற வினர்கள் முன் வந்தனர். இதனடிப்படையில், இள வரசனின் இரு சிறுநீரகங் கள், கல்லீரல், தோல் ஆகி யவை தானமாகப் பெறப் பட்டன. இதில், ஒரு சிறுநீரகம் தஞ்சாவூர் மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சி தனியார் மருத்துவமனைக்கும், தோல் மதுரை தோல் வங்கிக் கும் தானமாக வழங்கப்பட்டது. இதையடுத்து, இளவரச னின் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், கோட்டாட் சியர் செ.இலக்கியா அரசு மரியாதை செலுத்தினார். மேலும், தஞ்சாவூர் மருத் துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் ஆர். பாலாஜிநாதன், மருத்துவக் கண்காணிப்பாளர் சி. ராம சாமி, உதவி நிலைய மருத் துவ அலுவலர் முகமது இத்ரீஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதன் மூலம், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் 8 ஆவது உடல் உறுப்புகள் தானமும், 14 ஆவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.