districts

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை திறக்க வேண்டும்

தஞ்சாவூர், ஜூன் 20-  

    திருவிடைமருதூர் அருகே கொள்ளி டம் ஆற்றில் மணல் குவாரியை திறக்க வேண்டும் என்று மணல் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  

   தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சி யர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில் துணைச் செய லாளர் கே.அன்பு, பொருளாளர் பி.என்.பேர்நீதிஆழ்வார், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ்.மூர்த்தி, புகையிலை தொழிலாளர் சங்கத்  தலைவர் சண்முகம், செயலாளர் கணேசன்  ஆகியோர் முன்னிலையில் புகையிலை தொழிலாளர்கள், மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கொடுத்த மனுக்களில் கூறியிருப்பதாவது:  

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமரு தூர் தாலுகா கொள்ளிடம் ஆற்றில் மணல்  குவாரி திறக்கக் கோரி 500-க்கும் மேற்பட்ட  மாட்டுவண்டி தொழிலாளர்கள் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளோம்.  மாட்டுவண்டி தொழிலை நம்பி நூற்றுக்க ணக்கான குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகின்றன. தற்போது அவர்கள் வரு மானத்தை இழந்து வாழ வழியின்றி தவித்து  வருகிறார்கள். எனவே இதில் உடனே தலை யிட்டு மணல் குவாரியை திறப்பதற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும்.  

     கும்பகோணத்தில் 50 ஆண்டுகளுக் கும் மேலாக மெல்லும் புகையிலை தயா ரித்து, விற்பனை செய்து வரும் தனியார் நிறு வனத்தில் 250-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகிறோம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உணவுப் பாது காப்புத்துறை உத்தரவின் பேரில் புகை யிலைக்கு தடை விதிக்கப்பட்டு நிறுவனம் மூடப்பட்டுள்ளது.  

   இதனால் 250-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாழ  வழியின்றி குடும்பத்துடன் தவித்து வரு கிறோம். எனவே மெல்லும் புகையிலை மீதான தடையை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் புகையிலை தொழிலா ளர்களான எங்களுக்கு அரசு மாற்று வேலை  வழங்க வேண்டும்.  

     இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.