districts

பள்ளி வாகனத்திலிருந்து 3 வயது சிறுவன் கடத்தல்

நாகர்கோவில்,ஜூன் 27-

    செவ்வாயன்று காலை 9 மணிக்கு  பள்ளி வாக னத்தை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து 3 வயது சிறு வனை கடத்தி சென்றார்கள்.

     சம்பவம் குறித்து அறிந்த‌ வுடன் காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். சிறுவனை கடத்தி யது யார்? அவர்கள் எதற் காக கடத்தினார்கள்? என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பேரில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர். முதற்கட்ட விசார ணையில் மணவாளக் குறிச்சியை சேர்ந்த பிபின் பிரியன் , தக்கலை அருகே உள்ள பிலாங்காலை பகுதி யைச் சேர்ந்த பிரியா‌ ஆகி யோர் காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களு க்கு 3 வயதில் மகன் உள்ளான்.  

    இந்த நிலையில் பிபின் பிரியனுக்கும் பிரியா வுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பிரியா தனது மகனுடன் கணவரை பிரிந்து பிலாங்காலை வந்து விட்டார். தொடர்ந்து மகனை கடமலைக்குன்று பகுதியில் உள்ள ஒரு பள்ளி யில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்துள்ளார்.

     தினமும் பள்ளி வாக னத்தில் சிறுவன் சென்று வந்தான். செவ்வாயன்றும் வழக்கம்போல் காலை 9 மணிக்கு அவன் பள்ளி வாகனத்தில் புறப்பட்டான். அந்த வாகனத்தில் மேலும் சில மாணவர்களும் இருந்த னர். சாமிவிளை பகுதி வழியாக பள்ளி வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் 2 கார்கள் வேகமாக வந்தன. அதில் இருந்து ஒரு கும்பல் இறங்கி உள்ளது. அந்த கும்பல் பள்ளி வாக னத்தை நோக்கி ஓடி வந்தது. இதனைக் கண்டு பள்ளி வாகனத்தில் இருந்த மாணவர்களும் ஒட்டுநர் மற்றும் உதவியாளரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் மர்ம கும்பல் பள்ளி வாகனத்தை சுற்றி வளைத்தது. அவர்கள் பள்ளி வாகனத்தில் இருந்த பிரியாவின் மகனை வலுக் கட்டாயமாக தூக்கிக் கொண்டு அவர்கள் வந்த கார்களில் தப்பிச் சென்றனர். காவல்துறை பல கோணங்க ளில் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளி வாகனத்தை மறித்து சிறுவன் கடத்தப்பட்ட சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.