districts

வீணா விஜயனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கேரள சமூகம் நிராகரிக்கும் ஏ.கே.பாலன்

திருவனந்தபுரம், ஆக.13-            

       கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு எதிராக ஒரு மாதமாக நீடித்து வரும் விவாதத்துக்குப் பின்னால் ஒரு சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல் இருப்பதாக சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.கே.பாலன் கூறினார்.

      இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் தாக்குதல் நடத்த வேண்டும் என்றால் எதிர்க் கட்சிகள் அவசர தீர்மானம் கொண்டு வந்திருக்கலாம். முதல்வரின் பதிலுக்கு பயந்து தான் அவசர தீர்மானம் கொண்டு வரவில்லை என  தெரிவித்தார்.  எதிர்க்கட்சி கள் ஒவ்வொரு நாளும் விவாதத்தை ஏற்படுத்தி வரு கின்றன.  தலைவர்களின் மகன்களாக இருந்தால் பதவி  பெற்றாலும் அரசு வேலை கிடைக்கக்கூடாது. சொந்தமாக தொழில் தொடங்க கூட அனுமதிக்கவில்லை. அந்த விவாதங்கள் உண்மையாக இருக்கவில்லை. காங்கிர சில் கடும் மோதல் ஏற்படும் போதெல்லாம் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அவற்றில் நீதி விசாணை கோரப்படுகிறதா என்றும் ஏ.கே.பாலன் கேள்வி எழுப்பினார்.