திருவனந்தபுரம், டிச.10- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கானம் ராஜேந்திரன் வெள்ளியன்று காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சி டிசம்பர் 10 ஞாயிறன்று கேரள அரசு மரியாதையுடன் நடைபெற்றது. வாழூரில் உள்ள அவரது வீட்டு வளா கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உட லுக்கு முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். திருவனந்தபுரம் முதல் வாழூர் வரையிலான சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் வெள்ளியன்று மாலை கானம் ராஜேந்திரன் உயிரிழந்தார். சனிக்கிழமை யன்று அவரது உடல் விமானம் மூலம் திரு வனந்தபுரத்தில் உள்ள சிபிஐ மாநிலக்குழு அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. அமைச்சர்கள் கே.ராஜன், பி.பிரசாத், பினாய் விஸ்வம் எம்.பி., கானம் ராஜேந்திர னின் மகன் சந்தீப் ஆகியோர் உடனிருந்தனர். அவரது வாழ்க்கையை சித்தரிக்கும் படங் களால் அலங்கரிக்கப்பட்ட கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் அவரது உடல் பகல் 2 மணிக்கு சொந்த ஊரான வாழூருக்கு ஊர்வலமாக புறப்பட்டது. அமைச்சர்கள், தலைவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனை வரும் பின்தொடர்ந்தனர். கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்க ளில் 21 மையங்களில் நூற்றுக்கணக்கானோர் காத்திருந்து பிரியா விடையளித்தனர்.