மருதுபாண்டியர் கல்லூரி இளநிலை பாதுகாப்புத் துறை மாணவர்கள் கவிச்செல்வன், சுதர்சன் ஆகியோர், ஏலகிரி டான் பாஸ்கோ கல்லூரியில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை சார்ந்த மாதிரி தயாரித்தல் போட்டிகளில் கலந்து கொண்டு, தாங்கள் தயாரித்த மாதிரிக்கு முதல் பரிசு பெற்றனர். பரிசு பெற்ற மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கொ.மருதுபாண்டியன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.