திருச்சிராப்பள்ளி, செப்.28- திருச்சிராப்பள்ளி காவேரி மருத்து வமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் டி.செந்தில்குமார் வியாழனன்று செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எலக்ட்ரோ பிசியாலஜி தளத்தில் முன்னோடி மருத்துவ அமைப்பாக திக ழும் திருச்சிராப்பள்ளி காவேரி ஹார்ட் ரிதம் சர்வீசஸ் குழந்தைகளுக்கான எலக்ட்ரோ பிசியாலஜி (மின் உடலியங்கியல்) என்ற புதிய துணைப் பிரிவைத் தொடங்கியுள்ளது. குழந்தைகளிடம் காணப்படும் இதயப் பிரச்சனைகளுக்குச் சிகிச்சையளிக்க டெல்டா பிராந்தியத்தில் ஒரு பிரத்யேகப் பிரிவை நிறுவியிருக்கும் முதல் கார்ப்ப ரேட் மருத்துவமனை என்ற பெருமையை காவேரி ஹார்ட் சிட்டி பெற்றுள்ளது. இதயப் பிரச்சனை உள்ள குழந்தை களுக்கு உறுப்பு நீக்கங்கள், பேஸ்மேக் கர்கள், மரபியல் ரீதியாக குழந்தைகளுக்கு வரும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு சிகிச்சை, வளரும் கருவில் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு இருப்பதை அடையாளம் கண்டு சிகிச்சையளித்தல் போன்ற பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இந்த எலக்ட்ரோ பிசியாலஜி பிரிவு ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிறப்பு வெளி நோயாளிகளுக்கான சேவைகளை வழங்கும். இதன் மூலம் இளவயது நோயாளி களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இதய ரிதம் பிரச்சனைகளுக்கு உயர்தரச் சிகிச்சையளிக்கும் பிரத்யேகப் பணியை இந்த பிரிவு மேற்கொள்ளும். உலக இதய தினத்தன்று குழந்தை களுக்கான எலக்ட்ரோ பிசியாலஜி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது நோயாளிகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படி யாகும் இவ்வாறு அவர் கூறினார். இதயவியல் மற்றும் எலக்ட்ரோ பிசியா லஜி சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோசப் கூறும்போது, இந்த மருத்துவமனையில் கடந்த 2021 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஹார்ட் ரிதம் சர்வீஸ் தொடங்கப்பட்ட திலிருந்து 400 க்கும் அதிகமான எலெக்ட்ரோ பிசியாலஜி மருத்துவச் செயல்முறைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு இருக்கிறோம். ஏற்கனவே வயதில் மூத்த பெரிய வர்களுக்கு சிகிச்சையளிக்க மிக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது குழந்தைகளுக்கான எலக்ட்ரோ பிசியாலஜி என்ற துணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது குழந்தை இருதய நோய் நிபுணர் டாக்டர் மணி ராம்கிருஷ்ணா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.