கரூர், ஆக.16 -
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட 8 ஆவது மாநாடு அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் கே.செவந்தலிங்கம் தலைமை வகித் தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பொன்.ஜெயராம் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி வேலை அறிக்கையையும், பொரு ளாளர் எல்.பாலசுப்ரமணியன் வரவு-செலவு அறிக்கையை யும் முன்வைத்தனர்.
மாவட்டத் தலைவராக கே.செவந்தலிங்கம், மாவட்டச் செயலாளராக எல். பாலசுப்ரமணியன், மாவட்டப் பொரு ளாளராக ஆர்.சிவக்குமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து அரசாணை வழங்கிட வேண்டும். பணியின் போது உயிரிழந்த சாலை பணியாளரின் வாரிசுக்கு நெடுஞ்சாலை துறையிலேயே பணி வழங்க வேண்டும். கரூரி லிருந்து சென்னை செல்வதற்கு பகலில் ரயில் சேவை தொடங்க வேண்டும். கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால், அதனை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.