கரூர், அக்.24- தென்னிந்திய சிபிஎஸ்இ ஜூடோ போட்டியில், கரூர் பரணி வித்யா லயா பள்ளி 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடை யிலான தென்னிந்திய அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. இப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நிறை வடைந்தன. இதில், கரூர் பரணி வித்யாலயா பள்ளி இந்த ஆண்டு 9 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் வென்று மொத்தம் 89 புள்ளிகளுடன், தொடர்ந்து 11-வது முறையாக பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து, தென்னிந்திய சிபிஎஸ்இ ஜூடோ ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. இந்நிலையில், தில்லியில் அடுத்த மாதம் இறுதியில் நடைபெறும் தேசிய போட்டிகளில் பங்கேற்க தேர்வாகி, கரூர் பரணி வித்யாலயா பள்ளி புதிய வரலாறு படைத்து தமிழ கத்திற்கு பெருமை சேர்த்தது. இந்தப் போட்டிகளில், கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாண வர்கள் 9 பேர் தங்கப் பதக்கமும், 11 பேர் வெள்ளிப் பதக்கமும், 11 பேர் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ள னர். மொத்தம் 31 பதக்கங்களை வென்று ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவிலும் சாம்பியன் பட்டம் பெற்ற னர். இதன்மூலம் புள்ளிகளின் அடிப்ப டையில், 11-வது முறையாக கரூர் பரணி வித்யாலயா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அண்மையில், கொங்கு சகோ தயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநில ஜூடோ போட்டிகளிலும் பரணி வித்யாலயா, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. சாம்பியன் பட்டம் பெற்று தமி ழகத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்க உறுதுணையாக இருந்த தமிழ்நாடு ஜுடோ சங்க மாநில துணைத் தலைவரும், பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வரு மான முனைவர் சி.ராமசுப்பிரமணி யன், முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா, பரணி ஜூடோ பயிற்சியாளர்கள் முத்து லட்சுமி, பார்த்திபன், ரம்யா, கார்த்தி கேயன் ஆகியோரை பள்ளி தாளா ளரும், மாவட்ட ஜூடோ சேர்மனுமான எஸ்.மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங் காவலர் எம்.சுபாஷினி மற்றும் பெற் றோர்கள் வாழ்த்தினர்.